India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேட்டரி சார்ஜிங், மைலேஜ் மின்சார வாகனங்களுக்கு பெரும் தடையாக உள்ளன. இதானல் மின் வாகனங்களின் பக்கம் செல்ல மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இச்சிக்கலை 2027க்குள் தீர்க்க உத்தேசித்த சாம்சங் நிறுவனம், வெறும் 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து 965 கி.மீ மைலேஜ் தரும் பேட்டரியை தயாரித்துள்ளது. இது 20 ஆண்டுகள் வரை வேலை செய்யும், எந்த வாகனத்திலும் பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது.
கவுதம் கம்பீரால் பயிற்சியாளர் பதவியில் நீண்ட காலம் இருக்க முடியாது என, முன்னாள் வீரர் ஜோகிந்தர் ஷர்மா தெரிவித்துள்ளார். அனைத்து விஷயங்களிலும் கம்பீரிடம் ஒரு முடிவு இருக்கும் என குறிப்பிட்ட அவர், ஆனால் அது வீரர்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது என்றார். விராட் கோலியை மனதில் வைத்து தான் பேசவில்லை எனவும், பல்வேறு சூழ்நிலைகளில் கம்பீரின் முடிவுகள் வித்தியாசமாக இருந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
வக்ஃப் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. சொத்துகள் மீதான வாரியத்தின் அதிகாரம், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிப்பு உள்ளிட்ட 40 திருத்தங்களுடன் புதிய சட்டத்தை கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வக்ஃப்
சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட, அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் மாலை 5.30 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு மீனவ பிரதிநிதிகளுடன் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார். அங்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கும் அவர், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தொடர் தாக்குதல் குறித்து மனு அளிக்க உள்ளார். தமிழக பாஜக தலைவர் பதவி குறித்தும், தனது டெல்லி பயணத்தின்போது, கட்சி மேலிட நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப நிலையை அறிய விரும்புவர். இதற்கு பொது விநியோகத்துறையின் <
*மிளகாய்ப்பொடி டப்பாவில் சிறிது கட்டிப்பெருங்காயத்தை போட்டு வைத்தால், அது மணப்பதோடு விரைவில் கெடாது. *சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி காற்றுப்புகா டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் 4 நாள்கள் வரை கெடாமல் இருக்கும். *தோசைக்கு மாவு அரைக்கும்போது 2 உருளைக்கிழங்குகளை தோல் சீவி சேர்த்து அரைத்தால், பொன்னிறமாய் மிருதுவாக வரும். *சப்பாத்திக்கு தளர்வாகவும், கெட்டியாகவும் மாவு பிசைய வேண்டும்.
இலங்கை, இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து முதல் பந்தினை எதிர்கொண்ட நிசங்கா, சிராஜின் பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதோடு, சிராஜின் அபார பந்துவீச்சால் முதல் ஓவர் மெய்டனாக முடிந்தது.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார். நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே முதல் பணி எனக் கூறிய அவர், மாயமானோர் குறித்த விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். மீட்புப்பணிகளுக்கு கூடுதல் வீரர்கள் தேவைப்பட்டால், மத்திய அரசு வழங்கும் எனவும் கூறினார்.
மஞ்சுமல் பாய்ஸ் படக்குழு, இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்க, சம்மதம் தெரிவித்துள்ளது. இளையராஜா இசையமைத்த குணா படத்தின் கண்மணி பாடல், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இடம் பெற்றிருந்தது. அனுமதி பெறாமல் இப்பாடலை பயன்படுத்தியதாக, படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், தற்போது ரூ.60 லட்சம் இழப்பீடு தர, படக்குழு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.