India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 240 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபெர்னான்டோ 40, துனித் வெல்லாலகே 39, கமிந்து மெண்டிஸ் 40 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்து. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3, குல்தீப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மதுபான விளம்பரங்கள் மீது கடுமையான விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சேனல்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மதுபானங்கள் மற்றும் சிகரெட் போன்ற பொருட்களை விளம்பரம் செய்ய இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விளம்பர பேனர்கள் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்வதையும் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில், ‘டை’ ஆன போட்டிகளில் அதிகம் முறை விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை ஷிவம் துபே படைத்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 35 போட்டிகளில் அவர் விளையாடியுள்ள நிலையில், அதில் 5 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது. இதன்மூலம் வித்தியாசமான சாதனையை துபே படைத்துள்ளார். இந்தியா-இலங்கை இடையிலான முதல் ODI போட்டியில் ஷிவம் துபே விளையாடிய நிலையில், அந்தப் போட்டி டையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 8ஆம் தேதி கொள்கை முடிவுகளை RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட இருக்கிறார். இதில், ரெப்போ வட்டி விகிதம் மற்றும் பிற வட்டி விகித மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதேநேரம், இம்முறை ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கவிஞர் வைரமுத்துவுக்கு மதுரை தமிழ் இசைச் சங்கம் ‘முத்தமிழ் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கவுள்ளது. அதனை அவர் மறுப்பதே பெருமை என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ‘முத்தமிழ் அறிஞர்’ என்று அழைக்கும்போது, வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ் பேரறிஞர்’ என்ற பட்டம் பொருத்தமாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு, ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னார்வலர்கள் வழங்கிய உணவை சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தன்னார்வலர்கள் வழங்கும் உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் படை வீரர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஐஃபோன், ஐபேட் மற்றும் மேக் பயனாளர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிள் தயாரிப்புகள் பாதிப்புகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது. இந்த சாதனங்கள் உளவு பார்க்கப்படுவதாகவும், தரவுகள் திருடப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ள CERT-In, மென்பொருளை அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆய்வறிக்கை, பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. வயநாடு மாவட்டத்தில், ஜூலை 29இல் நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 350க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், அது தொடர்பான அறிக்கையில் பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கியுள்ளார்.
ஆண்ட்ராய்டு 4, IOS 11, KAI OS 2.4 வெர்சன் மற்றும் பழைய வெர்சன் மொபைல்களில் WhatsApp சேவைகள் நிறுத்தப்படுகிறது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களைச் சேர்ந்த 35 போன்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. சாம்சங் கேலக்சி S Plus, Core, எக்ஸ்பிரஸ் 2, iPhone 5, 6, 6S Plus, 6S, SE, Huawei C199, Huawei GX1s, Y625, Ascend P6 S, Ascend G525 உள்ளிட்ட போன்களில் இனி WhatsApp இயங்காது.
Sorry, no posts matched your criteria.