India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*மேகதாது அணையை கட்டினால், அது இந்தியாவின் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி விடும் – வைகோ *பட்டியலின மக்களுக்குள் உட்பிரிவுகளை ஏற்படுத்துவது சரியல்ல – மாயாவதி *2024-25ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ₹6,784 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. *2024 TNPL தொடரின் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் அணி வென்றது. *வங்கதேசத்தில் இன்று ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் உயிரிழந்தனர்.
இன்று (ஆகஸ்ட் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
காய்கறிகளை சமைக்கும்போது, அவற்றில் காணப்படும் தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், நொதிகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட சில சத்துகள் குறைய வாய்ப்புள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது கூடுதல் சத்துகள் கிடைக்கும் என்கிறார்கள். அதேநேரம், அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால், அஜீரண கோளாறு ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.
கோவை அணிக்கு எதிரான TNPL தொடரின் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. டாஸ் வென்ற கோவை அணி 129/7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 130 ரன்கள் என்ற இலக்கை துரத்திய திண்டுக்கல் அணியின் கேப்டனின் அஷ்வின் 52 (46) ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். 18.2 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம், என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், தலித் உரிமைகளை தனது கொள்கையாக முன்னிறுத்தும் பகுஜன் சமாஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் மாயாவதி, பட்டியலின மக்களுக்குள் உட்பிரிவுகளை ஏற்படுத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்.
உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு வார விடுமுறையை வீட்டை விட்டு வெளியேறி, செலவழிக்க முடியாத நிலையை ‘விடுமுறை வறுமை’ என்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பிறகு, ‘விடுமுறை வறுமை’ உலகளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழல் 2020இல் சற்று மேம்பட்டு வந்த நிலையில், லாக் டவுனுக்குப் பிறகு தலைகீழாக மாறியதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பயனாளர்களை துன்புறுத்தியதற்காகவும், நிதி மோசடியில் ஈடுபட்டதற்காகவும் சுமார் 400 ஆன்லைன் கடன் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவன ஆஃப்களை கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தடை செய்துள்ளது. இந்த செயலிகள் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 17 மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், 30-40 சீன நிறுவனங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 600 செயலிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
*மேஷம் – இன்பமான நாள்
*ரிஷபம் – சுகபோக வாழ்க்கை
*மிதுனம் – ஆக்கப்பூர்வமான நாள்
*கடகம் – செலவு அதிகரிக்கும்
*சிம்மம் – போட்டியை தவிர்க்கவும்
*கன்னி – உதவி செய்யும் நாள்
*துலாம் – லாபம் அதிகரிக்கும்
*விருச்சிகம் – நற்செயல் புரியும் நாள்
*தனுசு – வெற்றி உண்டாகும்
*மகரம் – அச்சம் தவிர்க்கவும் *கும்பம் – ஏமாற்றமான நாள் *மீனம் – கவலை அதிகரிக்கும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 300க்கும் அதிகமானோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனக் கூறி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 241 ரன்கள் என்ற குறைவான இலக்கையே SL நிர்ணயித்திருந்தாலும், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால் IND வீரர்களை திணறடித்தனர். குறிப்பாக, ஜெஃப்ரி வாண்டர்சே, அசலங்கா ஆகியோரது சுழலில் மட்டும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. கடைசி ODI போட்டி ஆக.7ஆம் தேதி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.