India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தத்துவஞானி சாணக்கியர் கூற்றுப்படி, 4 பழக்கங்கள் ஒருவரின் வாழ்வில் நுழைந்தால், அவர் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வருமானத்திற்கு அதிகமாகவோ, தேவைக்கு அதிகமாகவோ செலவு செய்வது, உங்களுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது, தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது, சோம்பேறித்தனம், பேராசை ஆகிய பழக்கங்கள் மனிதனுக்கு அதிக இழப்பையும், மகிழ்ச்சியற்ற நிலையையும் ஏற்படுத்துவதாக கூறுகிறார்.
அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகலாம் என, திமுக முன்னாள் எம்.பி செந்தில்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலையுடன், தலைவர் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய தலைவர் பதவிக்கு, வானதி, நயினார் நாகேந்திரன் பெயர்கள் அடிபடுகின்றன.
ஹிமாச்சலில், கடந்த ஜூலை 31ஆம் தேதி நிகழ்ந்த மேக வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 40 பேர் மாயமானதாகவும், மண்டி, சிம்லா மாவட்டங்களில் 4 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 87 சாலைகள் மூடப்பட்டுள்ளன. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, துணை ராணுவப்படை இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.
பிரேம்ஜியின் பேட்டிகளை பார்த்துவிட்டு, தன் மகளை கொடுக்கக்கூடாது என நினைத்ததாக, அவரது மாமியார் ஷர்மிளா தெரிவித்துள்ளார். பழகிப்பார்த்த பிறகே, பிரேம்ஜி தங்கமானவர் என்பதை உணர்ந்ததாகவும், மகள் தன்னை ஏதாவது வேலை செய்ய சொன்னால் கூட, பெரியவர்களை ஏன் வேலை வாங்குகிறாய் என கோபப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரேம்ஜியிடம் பிடித்த விஷயமே, அவர் மரியாதையாக நடந்துகொள்வதுதான் எனவும் கூறியுள்ளார்.
RBI தரவுகளின்படி, இந்தியர்கள் ரியல் எஸ்டேட்டில் 50.7%, தங்கத்தில் 15.5%, பங்குச்சந்தையில் 4.7% முதலீடு செய்துள்ளனர். இவற்றில், அதிகபட்சமாக பங்குச்சந்தை சுமார் 14% வருமானமும், தங்கம் 9.77% வருமானமும் கொடுத்துள்ளது. இந்நிலையில், நீண்ட கால அடிப்படையில் தங்கத்தை விட பங்குச்சந்தை நல்ல முதலீடாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரம் தங்கம், பணவீக்க விகிதத்தை தாண்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கோவை 29ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். ஏற்கெனவே, அங்கு மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டார். நாளை அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல், நெல்லை மாநகராட்சி மேயரை தேர்வுசெய்வதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்கிறது.
சம்பள உயர்வு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக பலர் அடிக்கடி தங்கள் வேலைகளை மாற்றுகின்றனர். ஆனால், ஒரே நிறுவனத்தில் பல தசாப்தங்களாக பணிபுரிந்த நபரை பற்றி உங்களுக்கு தெரியுமா? பிரேசிலை சேர்ந்த வால்டன் ஒர்த்மேன் என்பவர் 84 ஆண்டுகள் மற்றும் 9 நாள்கள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உலகின் மூத்த ஊழியர் என்ற சிறப்பை பெற்ற அவர், சமீபத்தில் தனது 102 வயதில் காலமானார்.
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.78ஆக சரிந்துள்ளது. முன்னதாக, 83.75 என்ற வரலாற்று வீழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை பதிவானது. ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி, அமெரிக்காவின் பொருளாதார சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இது 83.90 வரை வீழ்ச்சியடையலாம் என கணிக்கப்படுகிறது.
அம்பானி மகனின் திருமண விழாவில் நடிகர் ஷாருக்கானை சந்தித்தது, உணர்வுப்பூர்வமானது என WWE வீரர் ஜான் சினா தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவருடன் கைகுலுக்கியது அற்புதமான தருணம் எனவும், ஷாருக்கானுடைய பேச்சு உத்வேகமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வாழ்க்கையின் சரியான நேரத்தில் அவருடைய பேச்சுக்களை கேட்கும் வாய்ப்பு அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. ஏற்கெனவே, சென்னையில் நேற்றிரவு தொடங்கி அதிகாலை வரை, கனமழை பெய்தது.
Sorry, no posts matched your criteria.