news

News August 5, 2024

கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு தள்ளுபடி

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னை சட்ட விரோதமாக சிபிஐ கைது செய்துள்ளதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அவர் தனது மனுவில் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கைதுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News August 5, 2024

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி?

image

வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவில் சென்றதால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக் குழுவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், ராணுவத் தளபதி நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 5, 2024

ALERT: இங்கெல்லாம் கனமழை கொட்டித்தீர்க்கும்

image

தமிழகத்தில் காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை ராணிப்பேட்டை, தி.மலை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சென்னையில், 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

News August 5, 2024

சிறுவன் பலியான சம்பவத்தில் காவலர் மீது வழக்குப்பதிவு

image

சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், காவலர் மகேந்திரன் மீது போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த காவலர், திடீரென ஆட்டோவை தடுத்ததாக தெரிகிறது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, காவலர் மீது மோதி கவிழ்ந்ததில், ஆட்டோவிலிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News August 5, 2024

இன்றே கடைசி: அஞ்சல் துறையில் 44,228 பணியிடங்கள்

image

இந்தியா ஃபோஸ்டில் காலியாகவுள்ள GDS, BPM, ABPM உள்ளிட்ட 44,228 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக.5) கடைசி நாளாகும். இதற்கு indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ₹100 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள், SC, ST மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

News August 5, 2024

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தப்பியோட்டம்?

image

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், நாட்டை விட்டு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில், ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி, அங்கு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அங்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

News August 5, 2024

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

image

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தனக்கு ஜாமின் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே, விசாரணையை தள்ளிப்போட ED முயல்வதாக, செந்தில்பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால் இதனை மறுத்த ED தரப்பு, விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

News August 5, 2024

புதிய சாதனை படைத்த எரிவாயு உற்பத்தி

image

எரிவாயு உற்பத்தித்துறை புதிய சாதனை படைத்துள்ளதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 2020-21இல் 28.7 BCM ஆக இருந்த எரிவாயு உற்பத்தி, 2023-24இல் 36.43 BCM ஆக அதிகரித்துள்ளதாகவும், 2026இல் 45.3 BCM ஆக அதிகரிக்கும் எனவும், தனது X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதை ரீட்வீட் செய்துள்ள பிரதமர், வளர்ந்த இந்தியாவுக்கு எரிசக்தித்துறையின் தன்னிறைவு முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

News August 5, 2024

சண்டை பயிற்சியாளர்களுக்காக குரல் கொடுத்த எம்பி

image

சினிமா சண்டை பயிற்சியாளர்களின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துமாறு, நாடாளுமன்றத்தில் திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். படப்பிடிப்பு தளங்களில் சர்வதேச தரத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளவும், சண்டை பயிற்சியாளர்கள் பாதுகாப்பு வாரியத்தை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்த நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

கிரிக்கெட் உலகிற்கு சோகமான செய்தி

image

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் (55) காலமானார். கடந்த 2 வருடங்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. 1993இல் சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கிய அவர், 100 டெஸ்ட் போட்டிகளில் 6,744 ரன்களும், 82 ஒருநாள் போட்டிகளில் 2,380 ரன்களும் குவித்துள்ளார். தொடர்ந்து, 2002ல் ஒருநாள் மற்றும் 2005ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

error: Content is protected !!