India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ருமேனிய அணியை இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனிகா பத்ரா, ஸ்ரீஜா, அர்ச்சனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 3-2 என்ற புள்ளி கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட பல பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்க பொருளாதார கொள்கைகள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், உலகின் முன்னணி நிறுவனங்களான NVidia – 11%, கூகுள் – 11%, ஆப்பிள் – 10%, பேஸ்புக் – 10%, டெஸ்லா – 10%, அமேசான் – 10%, மைக்ரோசாஃப்ட் – 9% என கடும் சரிவை சந்தித்துள்ளன. இனி வரும் சில மாதங்கள் சவாலானதாக இருக்கக்கூடும்.
வக்ஃபு வாரிய மசோதா என்பது, நாட்டின் முக்கிய பிரச்னைகளை திசை திருப்ப, பாஜக மேற்கொள்ளும் வித்தை என சிவசேனா (UBT) எம்.பி பிரியங்கா சதுர்வேதி விமர்சித்துள்ளார். மசோதா இன்னும் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்படாததால், அது குறித்து தற்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது எனவும், பாஜகவிற்கு பிரச்னைகளை திசை திருப்பும் பழக்கம் இருப்பது, தங்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பத்தூர், ராமநாதபுரம், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டில் இருந்து தப்பி திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு வந்துள்ளார். இடஒதுக்கீடு போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவர், ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்துள்ளார். அவர் இங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் மகள் லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ‘தளபதி 69’ படத்தில் விஜய்யின் தோற்றத்தை படக்குழு இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த ஆக. 3 மற்றும் 4ஆம் தேதிகளில் லுக் டெஸ்ட் நடத்தப்பட்டதாகவும், செப்.5 ஆம் தேதி ‘தி கோட்’ படம் வெளியான பின்பு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் தனி நபராக அதிக பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனையை அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் வைத்திருக்கிறார். இதுவரை அவர் மொத்தம் வென்ற ஒலிம்பிக் பதக்கங்களின் எண்ணிக்கை மட்டும் 28 (23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்). குறிப்பாக, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் தொடரில் அவர் 8 தங்கப்பதக்கங்கள் பெற்றார். இந்த இரண்டு சாதனைகளையும் இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக, ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். தியாகிகளின் வாரிசுகளுக்கான 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தியும் நடந்த போராட்டம் கலவரமானது. இதையடுத்து, நாட்டை விட்டு அவர் வெளியேறிய நிலையில், ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததாகவும், மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என உஸ்-ஜமான் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில், ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் 3ஆவது வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை இலங்கையின் வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே முறியடித்துள்ளார். ரிச்சர்ட்ஸ் 1989இல் (6/41) விக்கெட் எடுத்திருந்த நிலையில், தற்போது அதை ஜெஃப்ரி வாண்டர்சே ( 6/33) முறியடித்துள்ளார். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரனும் (7/30), இரண்டாவது இடத்தில் மெண்டிஸூம் (6/13) உள்ளனர்.
‘G.O.A.T’ படத்தில் விஜய்யின் டீ-ஏஜிங் தோற்றத்தை சரி செய்யும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இப்படம், விஜய்யின் டீ-ஏஜிங் தோற்றம் வெளியான பிறகு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக, “ஸ்பார்க்” பாடலில் விஜய்யின் தோற்றம் ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறதாம்.
Sorry, no posts matched your criteria.