news

News August 5, 2024

விபத்தில் மதிமுக நிர்வாகிகள் பலி

image

மதுரை அருகே லாரி மீது கார் மோதியதில், மதிமுக நிர்வாகிகள் மூவர் பலியாகினர். சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில், மாநில தொண்டரணி அமைப்பாளர் பச்சைமுத்து, அமல்ராஜ், புலி சேகர் ஆகியோர் பலியாகினர். இதனிடையே, மூவர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக மதிமுக எம்.பி., துரை வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

கோலி, ரோஹித்துக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம்: நெஹ்ரா

image

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என நெஹ்ரா கூறியுள்ளார். இந்தியா அடுத்ததாக ஒருநாள் தொடரில் 2 -3 மாதங்களுக்கு பின்னரே விளையாட உள்ள நிலையில் இத்தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றார். மேலும், கம்பீரின் முடிவை தவறு என சொல்லவில்லை என்ற அவர், இது அவரது ஒரு திட்டமாகக் கூட இருக்கலாம் என்றார்.

News August 5, 2024

வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி

image

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்கீட் கலப்பு பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள், அனந்த்ஜீத் நருகா, மகேஸ்வரி செளகான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 146 புள்ளிகளுடன் இந்திய ஜோடி 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து வெண்கல பதக்கத்துக்காக நடைபெற உள்ள போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.

News August 5, 2024

ஐந்து மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு

image

நாமக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் MR.விஜயபாஸ்கர் தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்துள்ளது. நாமக்கல், கரூர் சிபிசிஐடி போலீசார் இணைந்து கரூரில் உள்ள கட்டுமான நிறுவனம், சேலம் சாலையில் உள்ள ஜி.ஆர்.எம் மற்றும் பொன் நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 5, 2024

வங்க தேசத்தில் இடைக்கால ஆட்சி அமைகிறது

image

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், வங்கதேச ராணுவத்தின் உதவியுடன் இடைக்கால அரசு அமைந்துள்ளது. ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமானுடன், வங்கதேச தேசியவாத கட்சி இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது. இதில் பிரபல எழுத்தாளர் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைய ராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது.

News August 5, 2024

முன்னேற்றம் அடையும் ஒலிம்பிக் போட்டிகள்

image

ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரிலும் விளையாட்டு வீரர்கள் புதிய முறைகளை கையாண்டு உலக சாதனை படைத்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வரிசையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1988ஆம் ஆண்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த கார்ல் லூயிஸ், 9.92 விநாடிகள் எடுத்துக் கொண்டார். ஆனால், இந்தாண்டு கடைசி இடம் பிடித்த செவில், வெறும் 9.91 விநாடிகளில் இலக்கை கடந்தார்.

News August 5, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்கள் முன்பதிவு செய்யலாம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-25க்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் 53 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் <>இந்த<<>> இணையதளத்தில் பதிவு செய்யலாம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 5, 2024

பிற நாடுகளில் தஞ்சமடையும் அரசியல் தலைவர்கள்

image

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்துள்ள நிலையில், உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, உள்நாட்டு கலவரம் காரணமாக அங்கிருந்து இருந்து தப்பி மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அதைப்போல பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் துபாய்க்கும், பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனிலும் தஞ்சமடைந்தனர்.

News August 5, 2024

நேற்று தலாய் லாமா; இன்று ஷேக் ஹசீனா?

image

ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து தப்பி திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வந்துள்ளார். இந்தியாவில் அவர் தஞ்சமடைவார் என்று கூறப்படும் நிலையில், இதற்கு முன் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா 60 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வருகிறது. 1962இல் இந்தியா வந்த அவரை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சீனா, இந்தியாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்த நிலையில், அதற்கு பணிய முன்னாள் பிரதமர் நேரு மறுத்துவிட்டார்.

News August 5, 2024

‘சர்தார் 2’ படத்தில் இணைந்த ஆஷிகா

image

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தில், நடிகை ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரில் உள்ள சீன எழுத்துக்கள், படத்தின் கதையம்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழில் அதர்வா நடித்த ‘பட்டத்து அரசன்’ படத்தில் அறிமுகமான ஆஷிகாவிற்கு இது 3ஆவது படமாகும். முன்னதாக தெலுங்கு படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

error: Content is protected !!