India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் ரியாஸ் கானின் மகனும் நடிகருமான ஷாரிக் ரியாஸ் கானுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஷாரிக்கிற்கு, மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தாயார் உமா ரியாஸ் கான் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமான ஷாரிக், பென்சில், டான், நேற்று இந்த நேரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சீனாவில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது வரும் ஆண்டுகளில் மேலும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் 30.43 லட்சம் ஜோடிகள் திருமணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4.98 லட்சம் குறைவாகும். வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை பற்றிய கவலையால், சீனர்கள் தனிமையில் இருக்க விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டெல்லி வந்தடைந்தார். டாக்காவில் இருந்து AJAX1431 என்ற எண் கொண்ட சி-130 ரக விமானத்தில் புறப்பட்ட அவர், டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார். வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான, இடஒதுக்கீட்டு போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, ஷேக் ஹசீனா அங்கிருந்து இருந்து வெளியேறியுள்ளார்.
ஒரு கருத்து யாரையாவது புண்படுத்தும் எனில், அதை கூறக்கூடாது என, ராமர் குறித்த அமைச்சர் சிவசங்கரின் பேச்சுக்கு, பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இது முக்கிய பிரச்னை இல்லை எனவும், மதம் என்பது சொந்த நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் தேஜஸ்வி கூறினார். ராமர் வாழ்ந்ததற்கான வரலாறு இல்லை என, தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேசியிருந்தார்.
2023-24 சராசரி மின் விநியோகத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. ராஜ்ய சபாவில் மத்திய அமைச்சர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் நகர் பகுதிகளில் நாளொன்றுக்கு 24 மணி நேரம் சராசரி மின் விநியோகம் நடைபெற்றதாகவும், ஊரகப் பகுதிகளில் 23.5 மணி நேரம் மின் விநியோகம் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சராசரியாக நகர்புறத்தில் 23.4 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 21.9 மணி நேரமும் உள்ளது.
மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அதிக அளவிலான பனை மரங்களை வளர்க்க ஒடிஷா அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 19 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மற்ற மரங்களை விடவும் பனை மரங்கள் உயரமாக இருப்பதால் அவை மின்னலை எளிதில் தடுக்கும் தன்மை கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒடிஷாவில் கடந்த 11 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 3,790 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தேர்தல் தோல்வி குறித்து, இபிஎஸ் தலைமையில் நடைபெற்று வந்த ஆலோசனை கூட்டம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், கிளைக்கழகங்கள், ஒன்றியக் கழகங்கள், சார்பு அணிகள் மொத்தமாக செயலிழந்த இடங்களில்தான் கட்சி டெபாசிட்டை பறிகொடுத்திருப்பதை தலைமை கண்டறிந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஒரு பட்டியலை தயார் செய்து மாவட்டச்செயலாளர்களிடம் களையெடுக்கும் பணியை தலைமை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் கொல்கத்தாவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம் டாக்காவிற்கு செல்லும், மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் வெடித்திருக்கும் கலவர சூழல் குறித்து நடிகை கங்கனா ரனாவத் X தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நம்மை சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கு ’பாரத்’தான் தாய்நாடு. இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஷேக் ஹசீனா கூட இந்தியாவை நாடி வந்துள்ளார். நாம் ராம ராஜ்யத்தில் வாழ்வதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 2,222 புள்ளிகளும், நிஃப்டி 662 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தது. இதனால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ₹18 லட்சம் கோடியை இழந்துள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.