news

News August 24, 2024

முருகன் மாநாட்டிற்கு CM ஏன் செல்லவில்லை? தமிழிசை

image

முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படும் ஒரு உத்திதான் என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு CM நேரில் செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், பெயரளவுக்கு மாநாடு நடத்திவிட்டு தங்கள் நிலைப்பாட்டில் அப்படியே தான் இருப்போம் என திமுக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சிறுபான்மையினர் மாநாடு என்றால், அவர் நேரில் செல்லாமல் இருந்திருப்பாரா என்றும் சாடினார்.

News August 24, 2024

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே…

image

காதல் தம்பதியர் நயன்தாரா & விக்னேஷ் சிவன் பசுமை நிறைந்த பூங்காவொன்றில் நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்களது 2 குழந்தைகளுடன் வெளிநாட்டு சுற்று பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Mine’ என்ற கேப்ஷனுடன் நயன் பதிவிட்டுள்ளார். கண்களில் காதலொழுக விக்னேஷ் சிவனை அவர் பார்க்கும் அந்தப் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

News August 24, 2024

விஜய் கட்சியில் இணைய விரும்பும் OPS மகன்!

image

பாஜகவுடன் அணுக்கமாக இருக்கும் OPS மீது அவரது மூத்த மகன் ரவீந்திரநாத் (OPR) கடும் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் இருந்து முழுமையாக விலக்கப்பட்டு, அரசியல் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் OPR, விஜய்யின் கட்சியில் இணைய காய்களை நகர்த்தி வருகிறாராம். OPS பாஜக தலைமையிடம் பேசி OPR-க்கு மத்திய அமைச்சர் பதவி, ராஜ்ய சபா சீட் வாங்கி தராததே இதற்கு காரணமெனக் கூறப்படுகிறது.

News August 24, 2024

நீதிபதி கேட்ட ஒரே கேள்வி.. கதறி அழுத சஞ்சய் ராய்!

image

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு, உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது. அப்போது, “இந்த சோதனைக்கு நீங்கள் சம்மதித்து ஏன்? என நீதிபதி கேட்டார். இதற்கு கதறி அழுத சஞ்சய் ராய், “நான் நிரபராதி. சிபிஐ என்னை எப்படியாவது சிக்க வைக்க நினைக்கிறது. உடனே என்னை சோதனை செய்யுங்கள். அப்போதாவது உண்மை தெரியும்” எனக் கூறினார்.

News August 24, 2024

நெல்சன் மனைவியின் CALL ரெக்கார்டை ஆராயும் போலீஸ்?

image

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையதாகத் தேடப்படும் ரவுடி மொட்டை கிருஷ்ணணுக்கு <<13898071>>நெல்சன் <<>>மனைவி மோனிஷா தொலைபேசியில் பேசியது தெரிந்ததால் அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியது. பிறகு அவருக்கு தொடர்பில்லை என போலீஸ் தெரிவித்தது. இருப்பினும், அவரின் CELL அழைப்புகள், வங்கி பணப் பரிவர்த்தனை விவரத்தை கைப்பற்றி போலீசார் ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

News August 24, 2024

மஞ்சு வாரியரிடம் ₹5.75 கோடி இழப்பீடு கோரும் நடிகை!

image

மஞ்சு வாரியரிடம் ₹5.75 கோடி இழப்பீடு கேட்டு Footage பட நடிகை ஷீத்தல் தம்பி நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மூவி பக்கெட் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்த Footage படத்தின் படப்பிடிப்பை பாதுகாப்பின்றி காட்டுக்குள் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய ஷீத்தல், இதனால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைப் பெற பல லட்சம் செலவானதாகக் கூறியுள்ளார். இப்படத்தில் நடிக்க ₹1.8 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சனிடம் விசாரணை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் அவரது குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. ஏற்கெனவே, இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், அவர் தனது நண்பர் மட்டுமே, கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நெல்சன் விளக்கமளித்துள்ளார்.

News August 24, 2024

ஐபிஎல்லில் தவானின் சாதனை

image

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷிகர் தவான், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிகிறது. இதுவரை 222 ஐபிஎல் போட்டிகளில் (221 இன்னிங்ஸ்) விளையாடியுள்ள ஷிகர், 2 சதம், 51 அரைசதங்களுடன் 6,769 ரன்கள் குவித்துள்ளார். 768 – 4s, 152 -6s அடித்துள்ள அவர், 99 கேட்சுகளை பிடித்துள்ளார். ஐபிஎல்லில் அதிக ரன் எடுத்த வீரர்களின் பட்டியலில், அவர் 2ஆவது இடத்தில் உள்ளார்.

News August 24, 2024

பாஜகவை நெருங்கினால் திமுக கூட்டணியில் இருந்து விலகல்: VC

image

ஆளுநர் விருந்து, கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் திமுக, பாஜக நெருக்கம் காட்டியது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திமுக ஏன் பாஜக கூட்டணியை நாட வேண்டும், அப்படி நாடினால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் விலகிவிடும் என்றார். திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் என்னவாகும் எனவும் வினவினார்.

News August 24, 2024

நாங்கள் நம்பிக்கைகளுக்கு தடையாக இருந்ததில்லை: CM

image

பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை CM ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாநாடு 2 நாள்களில் முடிந்தாலும், ஒருவாரத்திற்கு அரங்கம், கண்காட்சி திறந்திருக்கும் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும், அவற்றுக்கு அரசு தடையாக இருந்ததில்லை என்று கூறிய அவர், பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை திமுக வழங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

error: Content is protected !!