news

News August 5, 2024

படுகொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காது: ரகுபதி

image

தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகளுக்கு, அரசு பொறுப்பேற்க முடியாது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ஒருவர் யாரை கொலை செய்யப்போகிறார், என ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஊடுருவிச் சென்று பார்க்க முடியாது எனக் கூறியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பேரை போலீசார் கைது செய்து வருவதாக தெரிவித்தார். அமைச்சர் ரகுபதியின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 5, 2024

மகளிர் டி20 உலகக்கோப்பை நடைபெறுமா?

image

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் அக்.3 முதல் அக்.20 வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. தற்போது அங்கு வன்முறை வெடித்து ராணுவ ஆட்சியின் கீழ் அந்நாடு சென்றுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பை அங்கு நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வன்முறை குறைந்தால் மட்டுமே அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

News August 5, 2024

ரூ70,000 கோடி இழந்த ரிலையன்ஸ் நிறுவனம்

image

இந்தியப் பங்குச்சந்தையின் இன்றைய சரிவு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுடன் ஒப்பிடும்போது ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை ரூ.102 குறைந்து ரூ.2,896க்கு வர்த்தகம் ஆனது. இதனால், ஒரே நாளில் அந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.70.195.32 கோடியை இழந்தது. இதேபோல, டாடா மோட்டர்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களும் மதிப்பினை இழந்தன.

News August 5, 2024

தமிழ் வெப்சீரிஸில் நடிக்கும் விஜய் சேதுபதி

image

விஜய் சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் தமிழில் புதிய வெப் சீரிஸ் உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே இந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’ஃபார்ஸி’ வெப் சீரிஸ் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து, ‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ புகழ் மணிகண்டனுடன் இணைந்து தமிழில் அவர் இணையத்தொடர் நடிக்கவுள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இத்தொடருக்கு ‘முத்து என்கிற காட்டான்’ என பெயரிடப்பட்டுள்ளதாம்

News August 5, 2024

Olympics: அமித் ரோகிதாஸ் ஒரு போட்டியில் விளையாட தடை

image

இந்திய ஹாக்கி வீரர் அமித் ரோகிதாஸூக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற பிரிட்டனுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா வென்றது. இந்த போட்டியின் போது விதிமுறையை மீறியதாக கூறி அமித் ரோகிதாஸூக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால் அவர் நாளை நடைபெறும் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாட மாட்டார்.

News August 5, 2024

மேகாலயாவில் ஊரடங்கு பிறப்பிப்பு

image

மேகாலயாவில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு எல்லையோர பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எல்லையில் அதிகப்படியான போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

News August 5, 2024

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இந்த திருவிழா நாளை கொண்டாடப்படுவதால் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய துறைகள் தவிர்த்து பிற அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.31 வேலை நாளாகும்.

News August 5, 2024

+2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,006 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பணியிடங்களுக்கு 18 – 30 வயதுக்குட்பட்ட +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.

News August 5, 2024

‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் முடிவடைந்தது

image

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘மீனாட்சி பொண்ணுங்க’ தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. கணவரால் ஏமாற்றப்பட்ட பெண் தனது 4 மகள்களையும் வளர்த்து, சமுதாயத்தில் முன்னுக்கு வருவதே இத்தொடரின் கதை. இதில் சௌந்தர்யா ரெட்டி முதன்மைப் பாத்திரத்திலும், ஆர்யன், சுகன்யா, தீபா சங்கர் ஆகியோர் முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தனர். ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இத்தொடர் முடிந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

News August 5, 2024

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை

image

வங்கதேச விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து, அங்கு நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து PM பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.

error: Content is protected !!