India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஆகஸ்ட் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 11ஆவது நாளின் இறுதியில் பதக்கப்பட்டியலில் இந்தியா 59ஆவது இடத்தில் உள்ளது. 33ஆவது ஒலிம்பிக்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. சீனா, அமெரிக்கா உள்பட 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா 3 வெண்கல பதக்கங்களுடன் 59ஆவது இடத்தில் உள்ள நிலையில், சீனா (21), USA (19), ஆஸ்திரேலியா (13) தங்கப் பதக்கங்களுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.
கர்ப்பிணித் தாய்மார்கள் செய்யக்கூடாதவை என மருத்துவர்கள் சிலவற்றை அறிவுறுத்தியுள்ளனர். அவை, ➤ கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும். ➤ புகைபிடிக்கவோ, புகையிலையை மெல்லவோ, மது அருந்தவோ கூடாது. ➤ காஃபின் கலந்த பானங்களை உட்கொள்ள வேண்டாம். ➤ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். ➤கனமான பொருட்களை தூக்காதீர்கள். ➤கடுமையான உடல் செயல்பாடுகளைச் செய்யாதீர்கள்.
இந்தாண்டு மகாராஷ்டிராவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை மையமாக கொண்ட அக்கட்சி, பஞ்சாபிலும் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் நோக்கில் மகாராஷ்டிராவில் களம் இறங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள 36 தொகுதிகளிலும், மேலும் சில தொகுதிகளிலும் அக்கட்சி களம் இறங்கவுள்ளது.
தற்போதைய மக்களவையில் 35 வயதுக்கும் குறைவாக, 25 எம்பிக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1980இல் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக 52 ஆக இருந்துள்ளது. 1984இல் 43, 1989இல் 31, 1991இல் 40, 1996இல் 33, 1998இல் 34, 1999இல் 29, 2004இல் 31, 2009இல் 22, 2014இல் 33, 2019இல் 21 என்ற எண்ணிக்கையில் இளம் எம்பிக்கள் இருந்துள்ளனர். தற்போது மக்களவையில் 30வயதுக்கும் குறைவாக 3 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவரது வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர். இதேபோன்ற சம்பவம் 2022இல் இலங்கையில் நடந்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கையில் போராட்டம் வெடித்ததையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பொருட்களை அள்ளிச் சென்றனர்.
வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பயணித்த விமானத்தை பிளைட் ரேடார் 24 இணையதளத்தின் மூலம் அதிகம் பேர் கண்காணித்தது தெரியவந்துள்ளது. AJAX1413 என்ற எண் கொண்ட சி-130 ரக விமானம் உ.பி மாநிலம், ஹிண்டன் ராணுவ படை விமான நிலையத்தில் வந்திறங்கினார். ஷேக் ஹசீனா வானில் பயணித்த நேரத்தில், அவர் பயணித்த விமானத்தை 29 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கண்காணித்துள்ளனர்.
*மேஷம் – கவலையான நாள்
*ரிஷபம் – வரவு அதிகரிக்கும்
*மிதுனம் – தாமதம் ஏற்படும்
*கடகம் – செலவு அதிகரிக்கும்
*சிம்மம் – ஆதரவு தேடி வரும்
*கன்னி – அசதி உண்டாகும்
*துலாம் – வெற்றி கிடைக்கும்
*விருச்சிகம் – வருத்தம் உண்டாகும்
*தனுசு – நன்மையான நாள்
*மகரம் – அமைதியான நாள் *கும்பம் – செலவு அதிகரிக்கும் *மீனம் – பயம் உண்டாகும்
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் செய்த செயல் முகம்சுளிக்க வைத்துள்ளது. வீட்டிலிருந்த பொருட்களை தூக்கிச் சென்ற அவர்கள், உள்ளாடைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இட ஒதுக்கீட்டிற்காக போராடும் மாணவர்கள் ஏன் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களை செய்யவேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாரம் இருமுறை உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம், சூட்டினை தணிப்பது. உஷ்ண மண்டலமான இந்தியாவில், எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடல் சூட்டை தணித்து, பித்தத்தை குறைக்கிறது. மேலும், இப்படி குளிப்பதால் கண், காது, சரும நோய்கள் வராமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பு.
Sorry, no posts matched your criteria.