India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களில் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு சிறந்த வீரர் விருதினை ICC வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான 3 போட்டியாளர்களை ICC அறிவித்துள்ளது. அதில், அட்கின்சன் (ENG), வாஷிங்டன் சுந்தர் (IND) & கேசல் (SCT) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மூவரில் இந்த விருதினை வெல்லப் போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் சிப்காட் வளாகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் TRB ராஜா அறிவுறுத்தியுள்ளார். சிப்காட் மேம்பாடு ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அவர், “இந்திய அளவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய திட்டங்களை விரைந்து முடிக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்த பணிபுரிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 14 ▶குறள்: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். ▶பொருள்: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உணவுப் பொருள்களை உண்டாக்கும் உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
பிரதமர் மோடி ஆட்சியில்தான் நாட்டில் அதிக எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், “2013 பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, 2024 பட்ஜெட்டில் (₹90,958 கோடி) 164% கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளன. அவற்றில் 18 தற்போது செயல்பாட்டில் உள்ளன” எனக் கூறியுள்ளார்.
தென் கொரியாவில் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு 2,35,880 கால்நடைகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வட கொரியா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தென் கொரியா கடும் வெப்ப அலையைச் சந்தித்துவருகிறது. (1,546 பேர் பாதிப்பு, 11 பேர் உயிரிழப்பு). காலநிலை மாற்றத்தால், அந்நாட்டின் வெப்பநிலை 40° C-ஐ எட்டியுள்ளது. இது 2018ஆம் ஆண்டுக்கு பின் பதிவான அதிகப்படியான வெப்பநிலை என்று கூறப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசியுள்ளார். பந்து அதிகமாக ஸ்பின்னானதால் ஆட்டத்தின் பிற்பகுதியில் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்வது கடினமாக மாறியதாகக் கூறிய அவர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசை மாறி களமிறங்கியதால் பெரிய மாற்றத்தை அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஒவ்வொரு சமூகமும் அவரவர் வலிமைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டைப் பெற முடியுமென விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பி.சி, எம்.பி.சி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் எனக் கூறிய அவர், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கலை வடிவில் அரசியல் போரை முன்னெடுக்கும் தளபதி பா.ரஞ்சித்தின் படையில் தானும் ஓர் அங்கமாக இருப்பதாக நடிகை பார்வதி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ‘தங்கலான்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சினிமா உள்ளிட்ட அனைத்தையும் அரசியலாகத்தான் அணுக வேண்டும். அரசியலற்றது என்ற எதுவுமே கிடையாது. சமத்துவமின்மை ஏன் நிலவுகிறது? என்ற கேள்வியை அசௌகரியமாக இருந்தாலும் நாம் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
*தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகளுக்கு, அரசு பொறுப்பேற்க முடியாது – ரகுபதி
*ராம ராஜ்யத்தில் வாழ ஷேக் ஹசீனா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் – கங்கனா
*2023-24இல் சராசரி மின் விநியோகத்தில் இந்தியளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
*ICC சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு வாஷிங்டன் சுந்தர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
*ஏடன் வளைகுடாவில் சென்ற கப்பலை குறிவைத்து ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.