India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். தீபக் ராஜா கொடூரக்கொலை, சாதி ரீதியிலான கொலைகள் என தொடர் சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், நேற்றிரவு மேலப்பாளையம் சையது தமீம் என்ற இளைஞரை, மர்ம கும்பல் கொடூரமாகக்கொலை செய்துள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
வங்கதேச சுதந்திரப்போரில் ஈடுபட்டு பலியான ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு, அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு அமலில் இருந்தது. இதற்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால், 2018இல் அது ரத்து செய்யப்பட்டது. ஆனால், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு, இந்த நடைமுறையை கடந்த ஜூன் மாதம் மீண்டும் அமல்படுத்தியது. இதை எதிர்த்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டம் கலவரமாக மாறவே, 200 பேர் பலியாகினர். இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டது. இந்நிலையில், 30% இடஒதுக்கீடு வழக்கை விசாரித்த வங்கதேச உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டை 5%ஆக குறைத்தது. இதனால் பதற்றம் தணிந்து, அந்நாட்டில் படிப்படியாக அமைதி திரும்பியது. அப்படியிருக்கையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி மாணவர் அமைப்புகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கின.
மாணவ அமைப்புகளுக்கு ஆதரவாக பல்வேறு சங்கங்களும் போராட்டத்தில் குதித்ததால், ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக அவரது அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் ஏராளமானோர் பலியாகவே, பிரதமர் பதவியை ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார். புதிய அரசின் செயல்பாட்டை பொறுத்தே அமைதி திரும்பும்.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து, சென்னையில் ரவுடிகள், கொலையாளிகள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 27ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை ஒரு வார காலத்தில் 17 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மாருதி சுசூகி தனது முதல் எலக்ட்ரிக் காரை களமிறக்க உள்ளதாக, அந்நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். 2047ல் வளர்ந்த இந்தியா என்ற அரசின் இலக்கை நோக்கி, பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க ஹைப்ரிட், CNG, எத்தனால், பயோகேஸ் வாகனங்களை அதிகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் இந்தியா 60ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 3 வெண்கலப் பதக்கங்களுடன் நேற்று 57ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இந்நிலையில் வேறு பதக்கம் வெல்லாததையடுத்து, 3 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. 21 தங்கப்பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 20 தங்கப்பதக்கங்களுடன் அமெரிக்கா 2ஆவது இடத்திலும், 13 தங்கப்பதக்கங்களுடன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவை 3, 4ஆவது இடங்களிலும் உள்ளன.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த அவர்கள், விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகம் அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர் கைது சம்பவங்கள், மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் இலங்கை வசமுள்ளன.
2ஆம் உலகப்போரின்போது, ஜப்பானை பணிய வைக்க, 1945 ஆக. 6 காலை 8.15 மணிக்கு அமெரிக்க விமானப்படை USAAF B29 விமானமான `Enola Gay’, 1,800 அடி உயரத்திலிருந்து ‘Little boy’ என பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியது. இதில் 1.20 லட்சம் பேர் உடனடியாகவும், பல ஆயிரம் பேர் உடல்நிலை பாதித்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பலியாகினர். உலக வரலாற்றில் மனித இனத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய அத்தினமே இன்று கடைபிடிக்கப்படுகிறது.
தேர்தல்களில் அதிமுக பின்னடைவை சந்தித்ததை
சுட்டிக்காட்டி, கட்சிக்குள் இருக்கும் பிளவுதான் இதற்கு காரணம், அதனால் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த பேரணி செல்லப்போவதாக சசிகலா தெரிவித்திருந்தார். அதன்படி, தென்காசியில் கடந்த மாதம் 17ஆம் தேதி பேரணியையும் தொடங்கினார். ஆனால், அதன்பிறகு சத்தமே இல்லை. இதனால் தற்போது பேரணியை சசிகலா தொடர்கிறாரா, இல்லையா எனத்தெரியாமல், அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.