India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேச அரசியலுக்கு ஷேக் ஹசீனா மீண்டும்
திரும்பமாட்டார் என, அவரது மகன் சஜீப் வஜீத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, அவரது தலைமைக்கு எதிரான எழுச்சியால் ஹசீனா கடும் ஏமாற்றமடைந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் விளக்கமளித்துள்ளார். ஹசீனா வெளியேறியதும், அந்நாட்டு முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
JIPMER மருத்துவமனையில் 209 பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Junior Translator, Nursing Officer, Lab Technologist பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: M.A (ENGLISH, HINDI), B.Sc.(Nursing, Radiation Technology), Diploma, B.E. வயது வரம்பு:18-30. ஊதியம்: ₹19,900 – ₹35,400/-. கூடுதல் தகவல்களுக்கு <
போலி SCREEN SHOT அனுப்பி அப்பாவி மக்கள் வங்கிப்பணத்தை மர்ம நபர்கள் திருடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். ₹200, ₹400 தவறாக அனுப்பி விட்டதாக கூறி, முதலில் SCREEN SHOT அனுப்புவதாக சைபர் கிரைம் போலீஸ் கூறியுள்ளது. பிறகு அந்த பணத்தை திருப்பி அனுப்ப QR கோடை அனுப்புவர். அதை நம்பி அதில் பணம் அனுப்பினால், வங்கிப்பணம் மொத்தத்தையும் திருடுவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத் திறனாளிகள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு மொத்தம் 53 வகையான போட்டிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மொத்த பரிசு தொகை ₹37 கோடி. விருப்பம் இருந்தால் httpss//sdat.in/cmtrophy என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும், முழு தகவல்களை 95140 00777 என்ற எண்ணில் அனைத்து வேளை நாட்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் 9ஆம் தேதி வரை, மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதி, அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளி வீசக்கூடும் என்றும் வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. வங்கக்கடல், அரபிக்கடலிலும் சூறாவளி சூழன்றடிக்கும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஆடிப்பூர திருவிழாவையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா பிரசித்திப்பெற்றது. இந்த திருவிழா இன்று கொண்டாடப்படுவதால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கியத்துறைகளை தவிர்த்து, பிற அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று, வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் ( மணிக்கு 30 – 40 கி.மீ. வேகம்) மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் கனமழை பெய்யலாம் என்றும் கணித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 991.47 கி.மீ., தூர கடற்கரைகளில் 423 கி.மீ. மண் அரிப்பு (43%) ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 235.85 கி.மீ. தூர கடற்கரைப் பகுதிகள் மண் அரிப்புக்கு எதிரான மண் குவிப்புடன் உள்ளன. காலநிலை மாற்றம் & துறைமுக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட காரணங்களால், இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என, கடல் சூழலியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அவரின் ஜாமின் மனு மீதான நேற்றைய விசாரணையில், அமலாக்கத்துறை தரப்பில் வாய்தா கேட்க, நீதிபதிகள் அதற்கு அதிருப்தி தெரிவித்தனர். தனக்கு ஜாமின் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே, விசாரணையை தள்ளிப்போட ED முயல்வதாக செந்தில்பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்ட, விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று சபரீசன் நேரில் வாழ்த்தவில்லை, இதனால் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு என தகவல் வெளியானது. ஆனால் இது வதந்தி, 2 பேரும் இணைந்தே செயல்படுகின்றனர், அடிக்கடி சந்தித்து பேசுகின்றனர் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவுக்கு வேண்டாத யாரோதான், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வதந்தியை பரப்புவதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Sorry, no posts matched your criteria.