news

News August 6, 2024

இலங்கை சிறப்பாக ஆடுவது ஆச்சரியமளிக்கிறது: நாயர்

image

இலங்கை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆச்சரியமளிப்பதாக, இந்திய அணி துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயக் தெரிவித்துள்ளார். 2ஆவது ODI போட்டியில் இந்தியா தோற்றது அதிர்ச்சியளிக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார். இலங்கை பந்துவீச்சாளர்கள், நடுவரிசை பேட்ஸ்மேன்களை பாராட்டிய நாயர், எஞ்சியுள்ள 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

News August 6, 2024

திமுக கவுன்சிலர்களை ஒருங்கிணைக்கும் அமைச்சர்கள்

image

கோவையில் திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி அழைப்பு விடுத்துள்ளனர். 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், கடைசி நேர சலசலப்பை தவிர்க்க, அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 73 திமுக கவுன்சிலர்கள் உட்பட கூட்டணியில் உள்ள 96 கவுன்சிலர்களும் திருமண மண்டபத்திற்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

News August 6, 2024

சென்னையில் மயங்கி விழுந்து சினிமா பிரபலம் மரணம்

image

சென்னை வடபழனியில் திரைப்பட உதவி எடிட்டர் மணிரத்தினம் ரெட்டி, சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், மாத்திரை வாங்க நடந்து சென்றபோது சாலையில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஏற்கெனவே, உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

News August 6, 2024

உதயநிதிக்கு தற்போது துணை முதல்வர் பதவி இல்லை?

image

உதயநிதிக்கு இம்மாதம் துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதை சூசகமாக மறுத்துவிட்டார். இதை சுட்டிக்காட்டும் திமுக வட்டாரங்கள், தற்போதைக்கு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படாது. 2026 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. எனவே துணை முதல்வர் பதவி குறித்த செய்தியை நம்ப வேண்டாமெனவும் கூறுகின்றன.

News August 6, 2024

வாகேர் உஸ் சமான் யார்?

image

வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள ராணுவ தளபதி வாகேர் உஸ் சமான் பின்னணி குறித்து பார்க்கலாம். கடந்த ஜூனில்தான் தளபதியாக அவர், ஹசீனாவால் நியமிக்கப்பட்டார். அவர், ஹசீனாவின் தூரத்து உறவினர் ஆவார். UN அமைதிப்படையில், அங்கோலா, லைபீரியாவில் பணியாற்றியுள்ளார். 1997 -2000 வரை ஹசீனா பிரதமராக இருந்தபோது தளபதியாக இருந்த முஹம்மது முஸ்தபிஸுர் ரகுமானின் மகள் சரணாஸ் கமலிகாவை திருமணம் செய்துள்ளார்.

News August 6, 2024

இந்தியாவை வீழ்த்துமா ஆஸி?: மெக்ராத் பதில்

image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி கடினமாக உழைக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் வீரர் மெக்ராத் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த மெக்ராத், 2 அணிகளும் ஆக்ரோஷமானவை என்றார். சொந்த நாட்டில் விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமே என்ற போதிலும், ஏற்கெனவே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா தோற்கடித்துள்ளதை மறக்கக்கூடாது என்றார்.

News August 6, 2024

வங்கதேச கலவர பின்னணியில் சீனா, பாகிஸ்தான்?

image

இந்தியாவுக்கு எதிரான அரசை வங்கதேசத்தில் ஏற்படுத்த சீனா, பாகிஸ்தான் போராட்டத்தை தூண்டிவிட்டதாக இந்திய உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. ஹசீனா, தீவிர இந்திய ஆதரவாளர் ஆவார். இதனால் சீனா, பாகிஸ்தான் செல்வாக்கு பெற அனுமதிக்கவில்லை. எனவே பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI, சீனா ஆகியவை ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு நிதி உதவி அளித்ததாக உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

News August 6, 2024

உங்களுக்கு குழந்தைகள் உள்ளனவா? இதை படியுங்க

image

தாம்பரம் அருகே சேலையூரில் அஸ்வினி என்பவர் மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு, எஞ்சிய மாத்திரைகளை டேபிளில் வைத்துவிட்டு இரவில் தூங்கியுள்ளார். காலையில் 4 மணிக்கு கண்விழித்தபோது, வாயில் நுரைதள்ளிய நிலையில் 4 வயது மகள் ஹர்த்ரா இறந்துகிடந்தார். மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டது தெரியவந்தது. எனவே, குழந்தை உள்ள வீட்டில் பெற்றோர், மாத்திரையை மேஜையில் வைப்பதைத் தவிர்க்கவும். SHARE IT

News August 6, 2024

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

image

கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக, உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதன் எதிரொலியாக, பிராண்டு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 76 டாலருக்கு விற்பனையாகிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News August 6, 2024

விடுதலையாகிறார் கலிதா ஜியா

image

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை விடுதலை செய்ய, அதிபர் முஹம்மது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். டாக்காவில் நடைபெற்ற உயர்நிலைக்கூட்டத்தில் முப்படைத்தளபதிகளும், எதிர்க்கட்சித்தலைவர்களும் கலந்துகொண்டனர். இதில் கலிதாவை உடனே விடுவிக்க, அதிபர் உத்தரவிட்டார். ஊழல் வழக்கில் கைதான கலிதா (78), 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

error: Content is protected !!