India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘புஷ்பா’ வெற்றியை தொடர்ந்து, அதன் 2ஆம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு PAN இந்தியா அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்னும் 100 நாள்களில் ICONIC box office experienceஐ உணர தயாராக இருக்கும்படி பதிவிட்டு, அல்லு அர்ஜூனின் மாஸான போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. யாரெல்லாம் ‘புஷ்பா 2’ படத்துக்காக வெயிட்டிங். கமெண்ட்ல சொல்லுங்க.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். IPL தொடரில் MI, DC மற்றும் RCB அணிகளுக்காக விளையாடிய அவர் 2017ல் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் மும்பை அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த அவர், தற்போது LSG அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக LSG ஆலோசகராக கம்பீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்க்கெட்டில் 4, 5 காய்கறிகளை ஒன்றாக பாக்கெட் போட்டு விற்பார்கள். அதுபோல, NSE சந்தையில் சிறப்பான 50 நிறுவனங்களின் பங்குகளை கொண்ட தொகுப்பு Nifty என அழைக்கப்படுகிறது. BSE சந்தையில் சிறப்பான 30 நிறுவனங்களின் பங்குகளை கொண்ட தொகுப்பு Sensex ஆகும். இவற்றை கொண்டு சந்தையின் போக்கை நம்மால் அறிந்து கொள்ள முடியும். Share market குறித்து அறிய விரும்பும் கேள்விகளை கமெண்ட்ல பதிவிடுங்கள். <<-se>>#Sharemarket<<>>
“அரசியல் சீர்கெட்டுவிட்டது. சமுதாயம் அறமற்று செயல்படுகிறது” என்றெல்லாம் சிலர் புலம்புகின்றனர். ஆனால், இதை மாற்ற நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்டால், நம்மால் என்ன செய்ய முடியும்? என பதிலளிப்பார்கள். இவர்களுக்கு மாற்றத்தின் மீதான ஏக்கம் இருக்கிறது. அதே நேரம், அந்த மாற்றத்தை தன்னில் இருந்து தொடங்குவதில் தயக்கமும் உண்டு. எந்த மாற்றமாக இருந்தாலும் சரி, அதை நம்மில் இருந்து தொடங்குவோம்.
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை, ஓராண்டுக்குள் உடைந்து விழுந்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததே சிவாஜி சிலை உடைந்ததற்கு காரணம் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். இதனை விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, காற்றால் சிலை உடைந்துவிட்டது எனக் கூற வெட்கமாக இல்லையா?” என வினவியுள்ளார்.
Z பிளஸ் பாதுகாப்பில் இருப்பவர்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக அட்வான்ஸ் செக்யூரிட்டி லைசன் (ASL)பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளனர். இந்த பாதுகாப்பில் இருப்பவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு முன், ASL படையினர் அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்கள். தற்போது RSS தலைவர் மோகன் பகவத்துக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் வால்ட் டிஸ்னியின் ஊடக சொத்துக்களை இணைக்க CCI ஒப்புதல் அளித்துள்ளது. $8.5 பில்லியன் மதிப்பில் நடைபெறும் இந்த இணைப்பு நடவடிக்கை மூலம், Viacom18, 120 டிவி சேனல்கள், Disney + Hotstar மற்றும் ஜியோ சினிமா ஆகியவை ஒரே மீடியா நிர்வாக அதிகாரத்தை உருவாக்கும். இவை சோனி, அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT தளங்களுக்கு போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இளைஞர்கள் போனில் பேசுவதை விட, சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளவே விரும்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் Uswitch இணையதளம் நடத்திய ஆய்வில், 18-34 வயதுடைய 23% பேர் தங்கள் போன் கால்களை எடுப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது. 48% பேர் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ள விரும்புகின்றனர். அதே நேரம் 55 வயதை கடந்த 11% பேர் மட்டுமே சமூக வலைதளங்களை விரும்புகின்றனர். நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 57ஆவது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி ஓராண்டிற்கு மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜரான அவரின் காவலை செப்.3ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் மலான் (37), சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 22 டெஸ்ட், 30 ODI மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடிய மலான், அனைத்து வடிவிலும் சதம் அடித்த 2ஆவது இங்கிலாந்து வீரர் ஆவார். மற்றொருவர் ஜோஸ் பட்லர். 50 ஓவர் உலகக் கோப்பை 2023 தொடருக்கு பிறகு, எந்தவொரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.