India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையில் அடுத்தடுத்து பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கி வருவது, பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை பருகியதன் காரணமாக இவ்வாறு நோய் தொற்று ஏற்படலாம் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால், *பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த நீரை கொடுத்து அனுப்புங்கள். *குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “Continuous Airworthiness Manager” என்ற பதவி காலியாக இருப்பதாகவும், அதற்கு மாத ஊதியமாக ₹96,000 வழங்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளோர் நாளை முதல் www.nrsc.gov.in என்ற இணையதளத்தில் இம்மாதம் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
செந்தில்பாலாஜி ஆதரவாளரான ரங்கநாயகியை, மேயர் வேட்பாளராக அறிவித்ததற்கு, திமுகவின் மூத்த கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கே.என்.நேரு, முத்துசாமி முன்னிலையில் நடந்த திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில், தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என கூறி மீனா, சாந்தி முருகன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால், சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கீடு செய்து தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிட்ட 4 மையங்களில் ஒன்றை ஒதுக்காமல், வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதுதொடர்பாக திமுக எம்.பி வில்சன் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழ்நாட்டிலேயே மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக, தமிழக மாணவர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் கடுமையாக சரிந்துள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ₹3.50 குறைந்து ₹87.50க்கும், கிலோவிற்கு ₹3,500 குறைந்து ₹87,500க்கும் விற்பனையாகிறது. சமீப காலத்தில் இந்த அளவிற்கு விலை குறைவது இதுவே முதல்முறை. பட்ஜெட்டில் வரி குறைப்பின்போது கூட, கிலோவிற்கு ₹3,500 குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச விவகாரம் தொடர்பாக இன்று காலை அனைத்துக்கட்சிக்கூட்டத்திற்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேச விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார். அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியா-வங்கதேச எல்லைப்பாதுகாப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடக்க உள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்துள்ளன. இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன. குறிப்பாக, சென்செக்ஸ் 3% சரிவை சந்தித்தது. பங்குச்சந்தையில் ரூ.15 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், 963 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 79,722 புள்ளிகளாக வர்த்தகமானது. இது 1.22% அதிகமாகும்.
1997 முதல் இருதரப்பு ODI தொடரை இலங்கையிடம் இழக்கவில்லை என்ற சாதனையை, இந்தியா தக்க வைக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி இலங்கைக்கு எதிராக டி20, ODI தொடர்களில் விளையாடி வருகிறது. இந்திய அணி முதல் ODI போட்டியில் டையும், 2வது ODI-யில் தோல்வியும் அடைந்தது. இதனால் 3ஆவது ODI-யில் வென்று, சாதனையை இந்திய அணி தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து, ₹51,200க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹6,400க்கும் விற்பனையாகிறது. தங்கம் மீதான சுங்கவரி குறைப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பது, பத்திரங்கள் மீதான முதலீடு உள்ளிட்டவை காரணமாக இன்று விலை குறைந்ததால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் 1862 ஆக. 6இல் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. 1861இல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காலனியாதிக்க நாடுகளில் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இது ஏற்படுத்தப்பட்டது. 1996இல் மெட்ராஸ் பெயர், சென்னை என மாறிய போதிலும், உயர்நீதிமன்ற பெயர் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்றே உள்ளது. தமிழகம், புதுச்சேரி வழக்குகளை விசாரிக்கிறது.
Sorry, no posts matched your criteria.