India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மோர்தாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வெடித்தப் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பிய நிலையில், அவரது கட்சியினரின் வீடுகளை போராட்டக்காரர்கள் சூறையாடி வருகின்றனர்.
ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் வேலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மார்க்கெட்டிங் கன்சல்டன்ட், லாஜிஸ்டிக் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், பைனான்சியல் மேனேஜ்மென்ட் அனாலிஸ்ட், அப்ளிகேசன் டெவலப்பர் ஆகிய பதவிகள் காலியாக உள்ளதாகவும், மாதம் ₹1 லட்சம் -₹2.50 லட்சம் வரை ஊதியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி, வரும் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆவின் அறிவித்துள்ள வேலைக்கு விண்ணப்பிக்க,
5- 10 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். தேர்ந்தெடுக்கப்படுவோர், ஓராண்டு பதவியில் அமர்த்தப்படுவர். <
தொழில்துறையை திமுக அரசு படுபாதாளத்திற்கு தள்ளியதாக, இபிஎஸ் கண்டனம் தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பின் தொழில் நிறுவனங்களுக்கு 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அண்டை மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆனால், வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாக வெறும் தம்பட்டம் மட்டுமே திமுக அடிப்பதாகவும் விமர்சித்தார்.
வங்கதேசத்தில் நேற்று நிகழ்ந்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 135ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் நேற்று ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், நாளை அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஆட்சியிலிருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி, இந்தியா ஆதரவால் உருவான கட்சியாகும். ஹசீனாவின் தந்தையான மறைந்த வங்கதேச முதல் அதிபர் முஜிபூர் ரஹ்மான், இந்தியா ஆதரவுடனேயே பாகிஸ்தானுக்கு எதிராக 1971ஆம் ஆண்டு போர் தொடுத்து, கிழக்கு பாகிஸ்தானை தனி வங்கதேச நாடாக உருவாக்கினார். இப்படி, இந்தியாவுடன் நெருங்கியத்தொடர்பு கொண்ட அவாமி லீக் அரசின் ஆட்சி தற்போது கவிழ்ந்துள்ளது.
வங்கதேசத்தில் ராணுவ அரசோ, கலிதா ஜியாவின் வங்கதேச தேசியக்கட்சியின் அரசோ, ஜமாத் இ இஸ்லாமியக் கட்சி ஆதரவுடன் அரசு அமைவதோ இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படும். ஏனெனில், அந்த 3 தரப்பும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள். அத்துடன் சீன ஆதரவு அல்லது பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர்கள். அவர்கள் ஆட்சியமைத்தால், அங்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு அரசுகள் அமையும் நிலை ஏற்படும்.
இந்தியா பொதுவாக பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டதில்லை. ஆனால் வங்கதேச விவகாரத்தில் அந்த நிலைப்பாட்டை தொடருமா எனத் தெரியவில்லை. ஏனெனில், இந்தியா ஆதரவுடன் உருவான வங்கதேசத்தில் சீனா, பாகிஸ்தான் ஆதரவு அரசு அமைந்தால், அது தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். எனவே, இந்த விவகாரத்தில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதை அறிய, உலகமே காத்திருக்கிறது.
கோவை மேயர் தேர்தலில், திமுகவை சேர்ந்த ரங்கநாயகி போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரங்கநாயகிக்கு எதிராக திமுகவின் மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான சூழலை உருவாக்கினர். இதனால், திமுக சார்பில் வேறு யாரும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்யாததால், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.