India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரிசர்வ் வங்கி சார்பில், பொதுமக்களுக்கு SMS அனுப்பப்பட்டு வருகிறது. அதில், சட்டவிரோதமாக பிறரது பணத்தை சுமக்க வேண்டாம் என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பணம் மீதான ஆசையால் மோசடியாக பிறரின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை பெறுவதும், உங்களது கணக்கில் இருந்து பிறருக்கு பணத்தை அனுப்புவதும் சிறை செல்ல வழிவகுக்கும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
வங்கதேசத்தில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலை காரணமாக மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற ஐசிசி ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்ததால், நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இதனால், டி20 தொடரை இந்தியா அல்லது வேறு நாட்டில் நடத்தலாமா என்று ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் பயங்கர கலவரத்தால், உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, வங்கதேச கலவரத்துக்கு பின்னால் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ராகுல்காந்தி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசுக்கும் இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது என்றார்.
செந்தில் பாலாஜி வங்கிக்கணக்கில் PAN விவரமின்றி லட்சக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் ED தரப்பு அதிர்ச்சித்தகவலை தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, வங்கிச்சலானிலும் எந்த விவரமும் இல்லை என்றும், அவரது வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால், ஓராண்டுக்கு மேல் சிறையிலிருக்கும் அவருக்கு ஜாமின் கிடைப்பது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
கவனம் பெறாத துறைகளுக்கான புதிய திட்டங்களை உருவாக்க, மாநில திட்டக்குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எல்லா வளங்களும் இருக்கிறது என்ற நிலையை உருவாக்கி வருவதாக கூறிய அவர், ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியிலும் இருக்கக்கூடாது என்றார். அத்துடன், சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் இருக்க
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வங்கதேச விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க உள்ளார். இன்று காலை நடந்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில், இந்திய-வங்கதேச எல்லையில் எடுக்கப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இதன் தொடர்ச்சியாக, மக்களவையில் வங்கதேச விவகாரத்தில், இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விவரிப்பார் என தெரிகிறது.
இலங்கைக்கடற்படையால் கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, மாநிலங்களவையில் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். மீனவர்கள் கொலையை தடுக்க, மத்திய அரசு தவறி விட்டதாக சாடிய அவர், இலங்கைக்கடற்படையால், தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறினார். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா, இல்லையா? என்பதை அறிய விரும்புவதாகவும், மத்திய அரசை அவர் வினவியுள்ளார்.
தபால் துறையில் 44,228 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. அந்த வேலைகளுக்கு விண்ணப்பித்தோருக்கு தபால் துறை சார்பில் indiapostgdsonline.gov.in இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேலைக்கு விண்ணப்பித்தபோது அளித்த தகவலை, இன்று முதல் வருகிற 8ஆம் தேதி வரை திருத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. SHARE IT
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேச விமானம் இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற நிலையில், அவர் மட்டும் இங்கு இருப்பதாகத் தெரிகிறது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் அடைக்கலம் கோரியுள்ள ஹசீனா, அனுமதி கிடைக்கும் வரை, இங்கேயே தங்கி இருப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் 13,000 இந்தியர்கள் இன்னும் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கதேச நிலவரம் குறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களை உடனடியாக அழைத்துவர வேண்டிய தேவை ஏற்படவில்லை எனக் கூறினார். எனினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.