news

News August 6, 2024

காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்

image

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 50 கிலோ எடைப்பிரிவில் ஜப்பானின் யுய் சுசாகியை 3 -2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். யுய் சுசாகி நான்கு முறை உலக சாம்பியனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 6, 2024

புதிய சாதனை படைப்பாரா ரோஹித் ஷர்மா?

image

ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மேலும் ஒரு சாதனை படைக்க உள்ளார். நாளை நடைபெறும் இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இன்னும் 2 சிக்ஸர்கள் அடித்தால் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். ஷாகித் அப்ரிடி (351), கெயில் (331), ரோஹித் ஷர்மா (330) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

News August 6, 2024

ஆகஸ்ட் இறுதிக்குள் மாணவர்களுக்கு சீருடை

image

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 4 செட் புதிய சீருடைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளுக்கு முழுமையாக இன்னும் சீருடை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தனித்தனியாக அளவெடுத்து தைப்பதால், அவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

News August 6, 2024

நிலைமை மோசமடைந்ததால் ஹசீனாவுக்கு அனுமதி

image

வங்கதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். அதில், வங்கதேசமும், இந்தியாவும் பல ஆண்டுகளாக நட்பு நாடுகளாக இருப்பதாக கூறிய அவர், ஹசீனா வேண்டுகோள் விடுத்ததாலும், அங்கு நிலைமை மோசமடைந்ததாலும் அவருக்கு இந்தியாவுக்குள் அடைக்கலம் கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், இந்தியர்களின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

News August 6, 2024

ஹாரரின் உச்சம் தொட்ட ஹாலிவுட் படங்கள்

image

ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. அதில் கீழ்காணும் படங்கள் ஹாரரின் உச்சம் என்றே சொல்லலாம்.
*Wrong Turn: 1-7 படங்கள்
* Saw: 1-10 படங்கள்
*The Hills have the Eyes: 1-2 படங்கள்
*The Texas Chain Saw Massacre: 1-9 படங்கள்
*Hostel: 1- 3 படங்கள்
*Vacancy: 1-2 படங்கள்
*Friday the 13th: 1- 12 படங்கள்

News August 6, 2024

மக்களின் கண்ணீர் கடலில் உடல்கள் அடக்கம்

image

நிலச்சரிவில் சிக்கி அடையாளம் தெரியாமல் போன உடல்களுக்கு சீரியல் நம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. உடற்கூராய்வின் போதே அனைத்து உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, சீரியல் நம்பரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அடையாளம் தெரியாத உடல்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியப்பின் புதைக்கப்பட்டு வருகின்றன. மேலும், உடலை எடுத்த இடத்தைப் பொறுத்து, இறந்தவர்களின் சமாதிகளில் விரைவில் பெயர் குறிக்கப்படும்.

News August 6, 2024

இங்கிலாந்து செல்வோர் கவனமாக இருக்க அறிவுரை

image

இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அங்கு சில இடங்களில் போராட்டம் நடந்து வருவதால், அப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. லண்டனில் உள்ள இந்திய தூதரகம், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் அவசர உதவிக்கு +44(0)20 7836 9147 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளது.

News August 6, 2024

Breaking:அத்வானி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

image

பாஜக மூத்தத் தலைவர் அத்வானி உடல்நலக்குறைவால், டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை குறித்து, விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 6, 2024

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் விடுதலை

image

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த மே மாதம் டெல்லியில் அவரை, திருச்சி போலீஸார் கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவையிலும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, இரண்டு வழக்குகளிலும் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டு ஜாமின் பெற்ற அவர், இன்று விடுதலையானார்.

News August 6, 2024

கலவரத்தையே தோற்கடித்த இந்து – முஸ்லீம் உறவு: சல்யூட்

image

வங்கதேச உள்நாட்டு கலவரம், உலக நாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. அரசுக்கு எதிராக தொடங்கிய கலவரம், தற்போது வகுப்புவாத மோதலாக மாறியுள்ளது. அங்குள்ள இந்துக்கள் மீதும், இந்து கோயில்கள் மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், பல முஸ்லீம் மாணவர்களும், குருமார்களும் டாக்கா உள்ளிட்ட நகரங்களில் உள்ள இந்து கோயில்களை சுற்றி நின்று, அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.

error: Content is protected !!