India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு காலிறுதிச் சுற்றில், உக்ரைன் வீராங்கனை ஒக்ஸான லிவாச்சை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் ஒக்ஸானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.
செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மேல்முறையீட்டு வழக்கை, ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு அவர் கைதான நிலையில், ED காவலிலிருந்து ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்கே தற்போது பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது. (BVSc&AH) இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர் தரவரிசை பட்டியலும், BTech- உணவுத் தொழில்நுட்பம்/கோழியின தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு தகுதி பெற்றோர் தரவரிசை பட்டியலும் வெளியாகிறது. www.//adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற தளத்திலும் பட்டியல் வெளியிடப்படும்.
ஒலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், அனைவருமே 10 விநாடிகளுக்குள் ஓடி சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பிடித்தவர் 9.7 விநாடிகளில் இலக்கை எட்டிய நிலையில், கடைசி இடம் பிடித்தவர் 9.9 விநாடிகளில் இலக்கை அடைந்தார். இவர்கள் அனைவருமே வெவ்வேறு நாட்டினை சேர்ந்தவர்களாக பதிவு செய்திருந்தாலும், அனைவருமே ஆப்பிரிக்கர்கள் அல்லது ஆப்பிரிக்க வழித் தோன்றல்கள்.
ஜமாத்-இ-இஸ்லாமி என்பது PAK-BAN ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய அரசியல் கட்சியாகும். இது 1941ல் மௌலானா மௌதூதியால் நிறுவப்பட்டது. வங்கதேசத்தில் அதன் மாணவர் பிரிவான சத்ரா ஷிபிர் ISI-ன் கீழ் உள்ளது, இதுவே மாணவர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறியதன் பின்னணியில் உள்ளது. ஆக.1ல் ஜமாத்-இ-இஸ்லாமியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஷேக் ஹசீனா, வங்கதேச கலவரத்தின் பின்னணியில் அக்கட்சி இருப்பதாகக் கூறி தடை செய்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஈட்டி எறிதலில் 84 மீட்டருக்கு மேல் எறிந்தாலே இறுதி போட்டிக்கு முன்னேறிவிடலாம். ஒவ்வொரு வீரருக்கும் 3 வாய்ப்புகள் வழங்கப்படும் நிலையில், முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா.
வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீட்டை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானதால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து அங்கு புதிய அரசு அமைய உள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் பலர் இறைச்சியைத் தவிர்ப்பார்கள். இதற்கு பல அறிவியல் காரணங்கள் உள்ளன. அதை இங்கு அறிவோம். ஆடி மாதம் மழைக்காலத்தில் வருகிறது. இந்த நேரத்தில் கோழிகள் மற்றும் பிற விலங்குகள் நோய்களுக்கு ஆளாகின்றன. சூரிய ஒளியின் பற்றாக்குறையால், உடலின் செரிமான அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் இறைச்சி சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.