India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேசத்தில், 5 நட்சத்திர ஓட்டலுக்கு தீ வைக்கப்பட்டதில், 24 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வங்கதேச நாட்டில் பயங்கர கலவரம் மூண்டுள்ள நிலையில், அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்புடைய வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை கலவரக்காரர்கள் சூறையாடி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்று ஷேக் ஹசீனாவின் இல்லம் சூறையாடப்பட்டது.
வங்கதேசத்தின் அசாத்திய சூழலை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. வங்கதேசத்தின் மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகள் மட்டும் 80% இடம் பிடித்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருப்பூர் வசம் இருந்த ஆடை வியாபாரங்கள் தற்போது வங்கதேசத்திற்கு சென்றுவிட்டன. தற்போது, அங்கு கலவரம் நடப்பதால் திருப்பூர் வணிகர்கள் வியாபாரத்தை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பிரிட்டனில் தஞ்சம் புகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்நாடு அதை மறுத்துள்ளது. வங்கதேச கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியதால் ஷேக் ஹசீனா அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். இங்கிருந்து அவர் பிரிட்டனுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தனிநபர் யாரும் தஞ்சம் புகுவதற்கு தங்கள் சட்டம் அனுமதி அளிக்காது, என பிரிட்டன் உள்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.
கல்லூரிகளில் தற்போது 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகளும், ₹1000 கோரி விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வியில் சேருவதை ஊக்குவிக்கும் வகையில், மாதம் ₹1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. 2022இல் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அப்போது கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள வினேஷ் போகத் கடந்த ஆண்டு பல கடினமான சூழல்களை சந்தித்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாரின் கடுமையான தாக்குதலுக்கும் ஆளானார். அவருக்கு ஆதரவாக சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோரும் போராட்டத்தில் களமிறங்கினர்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது ஆபத்து என ஆஸ்திரியாவின் டான்யூப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் அவர்கள் நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ரத்தத்தில் கலந்து பிபியை அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்துவந்தால் இதய பிரச்னைகளுடன், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, அதிமுக சார்பில் ₹1 கோடி வழங்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர், ₹1 கோடிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில், 3 கிராமங்கள் மண்ணில் புதைந்ததுடன் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு பி.டி.உஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். மனு மற்றும் அவரது பயிற்சியாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை அவர் ஏந்துவதற்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நாட்டிற்காக மேலும் பல பதக்கங்களை மனு வெல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இணையத்தில் அனைவரையும் அதிரவைக்கும் பில் ஒன்று வைரலாகி வருகிறது. சென்னை தி.நகரில் அமைந்திருக்கும் ஓட்டல் ஒன்றில் வாழைக்காய் பஜ்ஜி – 225 ரூபாய், வாழைப்பூ வடை – 297 ரூபாய், பொடி இட்லி – 270 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வாழைக்காய் பஜ்ஜியில் ₹225க்கு என்ன உள்ளது என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு தண்ணீர் பாட்டிலை கூட இந்த ஓட்டல் ₹162க்கு விற்பனை செய்கிறது.
இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் அதிகமாக இருப்பதால் பிக்பாஸ் தொடரில் இருந்து சிறிய ஓய்வு எடுப்பதாக அவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.