India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 2 நாள்களில் மட்டும் 44 உடல்களும், 176 உடல் பாகங்களும் அடக்கம் செய்யப்பட்டதாக கேரள அமைச்சர் ராஜன் தெரிவித்துள்ளார். இன்று இரண்டு உடல் பாகங்கள் மீட்கப்பட்டதாக கூறிய அவர், சூரல்மலை பகுதியில் உள்ள 17 முகாம்களில் 2,225 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், காணாமல் போனவர்கள் பற்றி இதுவரை 152 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
2022-23 கல்வியாண்டில் +2 தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, விரைவில் ₹5000 வழங்கப்பட உள்ளது. மொத்தம் 5.16 லட்சம் பேர் தேர்வான நிலையில், முதல்கட்டமாக 4.64 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் பணி நேற்றுடன் முடிந்துள்ளதால், மாணவர்களின் வங்கிக் கணக்கில் விரைவில் ₹5,000 வரவு வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வங்கதேசத்தில் நடந்தவற்றை பார்த்து பிரதமர் மோடி நடுக்கத்தில் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளது. தனது X பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “லடாக் பகுதிகளில் உள்ள 4067 sq kms சீனா ஆக்கிரமித்தபோது மோடி கோழைத்தனமாக இருந்தார். மாலத்தீவுகளில் இருந்து அந்நாட்டு தலைவர்கள் இந்தியர்களை வெளியேற சொன்னபோது மோடி தள்ளாடினார். அவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீட்டில், வேலை செய்யும் ஜஹாங்கீர் ஆலம் ஜஹாங்கீர் ஆலம் ₹284 கோடி மதிப்பில் சொத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அவர் ₹284 கோடி சொத்து வைத்துள்ளது வங்கதேசத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஹசீனா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்குச் சொந்தமாக ₹3.14 கோடி, 6 ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1996-2001 திமுக ஆட்சியில், அமைச்சர்களாக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012இல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் இருவரையும் விடுவித்த நிலையில், ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸை தேர்வு செய்துள்ளார் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். மின்னசோட்டா மாகாண ஆளுநராக இருக்கும் இவர், பள்ளிகளில் இலவச உணவு, நடுத்தர மக்களுக்கு வரி குறைப்பு, நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அதிகரித்தது என்று பல புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தி புகழ் பெற்றவர். 60 வயதாகும் வால்ஸ், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்குகிறது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்தவாறே செல்கின்றன. இதேபோல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் இன்று நான்கு நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. ஒருபுறம் மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக, கரூர் பரமத்தி மற்றும் மதுரையில் 101 டிகிரி, தஞ்சாவூரில் 100.4 டிகிரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. உங்கள் பகுதியில் வெப்பம் எப்படி இருக்கிறது?
இந்தியா-இலங்கை இடையிலான 3ஆவது ODI, கொழும்புவில் நாளை நடைபெறவுள்ளது. 1997 முதல் இலங்கையிடம் ODI தொடரை தோற்றதில்லை என்ற சாதனையை, தற்போதுவரை IND தக்க வைத்துள்ளது. இந்நிலையில், SLக்கு எதிரான நாளைய கடைசிப் போட்டியில் IND அணி வென்று தொடரை சமன் செய்யுமா? அல்லது SL வென்று இந்தியாவின் 27 ஆண்டுகால சாதனையை தகர்க்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். முன்னதாக, முதல் ODI டை, 2வது ODIயில் IND தோல்வியடைந்தது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள், நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 22ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தற்போது இவர்களை விடுத்துள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம், 3 படகு ஓட்டுநர்களுக்கு ₹33.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.