India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்கள் மற்றும் போலி செய்திகளை கண்டறிந்து மக்களுக்கு உண்மை செய்திகளை வழங்க வாட்ஸ்-ஆப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் தகவல் சரி பார்ப்பகம் இந்த சேனலை நிர்வகிக்கிறது. இதற்கான QR code-ஐ வெளியிட்டிருக்கும் அரசு, அதன்மூலம் வாட்ஸ்-ஆப் சேனலை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஜிபே, ஃபோன்பே போன்ற யுபிஐ செயலிகளில் தற்போது வரை பாதுகாப்பிற்காக PIN நம்பர்கள் பெறப்படுகின்றன. அதனை மாற்றி பயோ-மெட்ரிக் முறைகளை பயன்படுத்த NPCI முடிவு செய்துள்ளது. இதற்காக, சில தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளன. இன்னும் சில மாதங்களில் விரல் ரேகை, கண் கருவிழி, முகம் ஆகியவற்றைக் கொண்டு உங்களால் UPI பணப்பரிவர்த்தனை செய்ய இயலும்.
இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், நாளை வெற்றிபெற்று தொடரை சமன் செய்வதற்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாளை எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.
சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில், ஆடி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலம். இதையொட்டி சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.31 வேலைநாள். இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை நடைபெறுவதால், விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.17 வேலைநாள்.
நாட்டில் 2023 – 24 நிதியாண்டில் 182.70 லட்சம் மெட்ரிக் டன் மீன் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் 17.8 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மீன்களின் மதிப்பு மட்டும் சுமார் ₹60,523 கோடி ஆகும். பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இதனை ₹1 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கை அணிக்கு எதிரான முன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இதுதான் இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாகும். இதையடுத்து அடுத்த ஆண்டு (2025) பிப்.25ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கிடையே பல டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வீரர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக WHO அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் நீச்சல் வீரர் ஆடம் பீட்டி, ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீராங்கனை லானி மற்றும் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா தீவுகளில் வாழ்ந்த குட்டை மனிதர்களின் உயரம் நாம் நினைப்பதை விட குறைவாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ளோரஸ் தீவுகளில் ஹோமோ ஃப்ளோரன்சிஸ் என்ற மனித இனம் வாழ்ந்தது. அவர்கள் சராசரியாக 3 அடி 2 அங்குலம் இருந்திருப்பார்கள் என்று கருதப்பட்ட நிலையில், அவர்கள் 3 அடிக்கும் குறைவாகவே இருந்திருப்பார்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை எனக்கூறி பெற்ற பணத்தில், செந்தில் பாலாஜிக்கு லஞ்சமாக ₹67.2 கோடி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனு மீதான வாதத்தில், நடத்துனர், பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ₹1.5 லட்சம் – ₹8 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்ட ED, அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இதனை உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென், ஒலிம்பிக்கில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக்கில் அனைவரும் தன் மீது செலுத்திய அன்பைக் கண்டு வியந்ததாக கூறிய அவர் வெற்றிபெற தன்னால் முடிந்தவரை போராடியதாகக் கூறினார். இருப்பினும் இறுதியில் போராடி தோல்வியடைந்ததாக தனது தோல்வி குறித்து கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.