India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜிகா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வருவது மகாராஷ்டிராவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களில் புனேவில் மட்டும் 66 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்ட 26 கர்ப்பிணிகள் நலமாக இருப்பதாக தெரிவித்தாலும், இந்த வைரஸ் பாதிப்பு கருவில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் அல்ஜீரிய வீராங்கனை இமானேவின் பாலினம் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை எப்போதுமே கேள்விக்குறியாக உள்ளது என்ற அவர், அப்போது எங்கள் தடகள வீராங்கனை சாந்தி, இப்போது இமானே எனக் கூறியுள்ளார். மேலும், இமானேவின் வலிமை அனைவருக்கும் வலிமையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பல தொழிலதிபர்கள் தொலைத்தொடர்பு சேவைகளில் களமிறங்கும் நிலையில், ஜியோ தனது பயனர்களுக்கு சில பழைய ரீசார்ஜ் திட்டங்களை புதுப்பித்துள்ளது. இதன்படி ₹299 (28 நாட்கள், 1.5ஜிபி, மொத்தம் 42ஜிபி), ₹249 (28 நாட்கள், 1ஜிபி, மொத்தம் 28ஜிபி), ₹209 (22 நாட்கள், 1ஜிபி, மொத்தம் 22ஜிபி), ₹199 (18 நாட்கள், 1.5ஜிபி, மொத்தம் 27ஜிபி) ஆகியவற்றில் மாற்றம் செய்துள்ளது.
தூங்கும் முன்பாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதுதான், ஆனால் அதிக அளவில் தண்ணீரை குடிக்க கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க கூடாது என்கிறார்கள். மேலும், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் மனச்சோர்வு நீங்கி மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் என்றும், நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர்.
நடிகர் அஜித் ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. அங்கு 10 நாள்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஸ்பெயினுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அரையிறுதியில் (50 KG) கியூபா வீராங்கனை குஸ்மானை எதிர்கொண்ட அவர் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் அவருக்கு, தங்கம் (அ) வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. மேலும், மகளிர் மல்யுத்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
*மேஷம் – ஏமாற்றம் ஏற்படும்
*ரிஷபம் – வெற்றி கிடைக்கும்
*மிதுனம் – கவலை அதிகரிக்கும்
*கடகம் – லாபகரமான நாள்
*சிம்மம் – நட்பு வட்டம் பெருகும்
*கன்னி – தடங்கல் உண்டாகும்
*துலாம் – மகிழ்ச்சியான நாள்
*விருச்சிகம் – தாமதம் ஏற்படும்
*தனுசு – சுகமான நாள்
*மகரம் – வரவு அதிகரிக்கும் *கும்பம் – சிக்கலான நாள் *மீனம் – அசதி ஏற்படும்
கடலில் மூழ்கி மாயமான ராமேஸ்வரம் மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் படகு மீது, இலங்கை கடற்படை படகு மோதியது. இதில், மலைச்சாமி என்பவர் பலியான நிலையில், ராமச்சந்திரன் மாயமானார். கடந்த 5 நாள்களாக இந்திய கடலோர காவல்படையினர் தேடி வரும் நிலையில், அவர் இன்னும் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி, சேலம், தி.மலை, குமரி, நெல்லை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, வேலூர் உள்பட 16 மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர், ரேகா ஷர்மா ராஜினாமா செய்துள்ளார். சமூக ஆர்வலரும், பெண்கள் உரிமைக்கான வழக்கறிஞருமான ரேகா ஷர்மா 2018 ஆகஸ்ட் 7இல், NCW தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2021 ஆகஸ்ட்டில் மீண்டும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், நாளையுடன் அவரது பணிக்காலம் முடிவதால், இன்று ராஜினாமா செய்துள்ளார். பெண்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதற்காக NCW உருவாக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.