India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
9 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 – 40 கி.மீ. வேகம்) லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
நிலமோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த எம்.ஆர் விஜயபாஸ்கர், தாம் கைதானபோது பெரிய அளவில் இபிஎஸ் கண்டனம் தெரிவிக்கவில்லை என வருத்தத்தில் இருந்தாராம். இதனால் கரூர் நிர்வாகிகளிடம் அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்த இபிஎஸ், கரூர் நிர்வாகிகளுடனான கலந்தாலோசனையை ஒத்திவைத்துவிட்டு, விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சேலம் மாவட்டத்திலும், ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திலும், இன்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய சேலத்தில் ஆக.31, விருதுநகரில் ஆக.17ஆம் தேதி வேலைநாள்.
ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில், 3 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 63வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 24 தங்கம் உள்பட 86 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா (22 தங்கம் உள்பட 59 பதக்கங்கள் ) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா (14 தங்கம் உள்பட 35 பதக்கங்கள் ) 3வது இடத்திலும், பிரான்ஸ் (13 தங்கம் உள்பட 48 பதக்கங்கள் ) 4வது இடத்திலும், பிரிட்டன் (12 தங்கம் உள்பட 46 பதக்கங்கள்) 5வது இடத்திலும் உள்ளன.
இயக்குநர் ராஜமௌலி நீண்ட கால நண்பர், அவர் படத்தில் நடிக்க வெகுநாட்களாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக, ‘தங்கலான்’ இசைவெளியீட்டு விழாவில் விக்ரம் பேசியுள்ளார். மேலும், அது எந்த படம் என இன்னும் முடிவாகவில்லை என்றும், விரைவில் ஒரு படத்தில் இணைவோம் எனவும் அவர் கூறியுள்ளார். அது, மகேஷ்பாபு நடிப்பில் ராஜமௌலி இயக்கப்போகும் புதிய பிரம்மாண்ட படத்தில்தான் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி (கலைஞர்) 2018ம் ஆண்டு ஆக. 7ம் தேதி மறைந்தார். அவரது 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணா மறைவிற்குப்பிறகு திமுக தலைவரான கருணாநிதி, கட்டுக்கோப்பாக கட்சியை வழிநடத்தினார். 13 முறை எம்எல்ஏவாகவும், 5 முறை தமிழக முதல்வராகவும் அவர் பதவி வகித்துள்ளார். தமிழ் இலக்கியம், தமிழ் திரைத்துறையிலும் கருணாநிதி பெரும் பங்களிப்பு அளித்துள்ளார்.
ஈரோடு திமுக நிர்வாகிகளை சந்திக்காமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடுக்கு அண்மையில் வந்த உதயநிதியை வரவேற்க திமுகவினர் கடந்த 1ஆம் தேதி இரவு கருமாண்டம்பாளையம் பகுதியில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை சந்திக்காமல் உதயநிதி சென்று விட்டதாகவும், இதேபோல் 2ஆம் தேதி கெஸ்ட் அவுசிற்கு வந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சற்றுநேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கிலிருந்து, அவர்களை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்த நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்ய, வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகிறது.
அக்டோபரில் ஆயுதபூஜையையொட்டி விடுமுறை வருவதால், அடுத்தடுத்து புதிய படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. அதன்படி, ரஜினியின் வேட்டையன், வெற்றி மாறனின் விடுதலை 2, சூர்யாவின் கங்குவா, ஜெயம் ரவியின் பிரதர், அஜித்தின் விடா முயற்சி, விஜய்யின் கோட், சிவகார்த்திகேயனின் அமரன் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இதனால் திரைப்பட ரசிகர்களுக்கு அக்டோபரில் நல்ல விருந்து காத்திருக்கிறது.
22 வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக,
மத்திய வேளாண் இணையமைச்சர் பிரதிமா மொண்டல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில அரசுகளுடனும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத் துறைகளுடனும் ஆலோசனை நடத்தியதாகக் கூறிய அவர், தேவை-வினியோக நிலவரம் உள்ளிட்ட பல அம்சங்களை கவனத்தில் கொண்டு, உற்பத்தி செலவைவிட, 50% கூடுதலாக MSP விலையை நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.