India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்த இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க இஸ்ரேல் மறுத்துள்ளது. காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த UNRWA அமைப்பு திட்டமிட்டிருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக காசாவில் உள்ள குழந்தை ஒன்று டைப்-2 வகை போலியோ வைரசால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக WHO புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் ₹1,000 கோடி வசூலித்து, பிரமாண்ட வெற்றிப்பெற்ற ‘கல்கி 2898 AD’ 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்குமென அப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தெரிவித்துள்ளார். மாஸ்கோ திரைப்பட விழாவில் பேசிய அவர், கல்கி முதல் பாகத்தைவிட 2ஆம் பாகம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றார். கல்கி-2 மட்டும் இருவேறு பாகங்களாக 2028ஆம் ஆண்டில் வெளியாகுமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டிராய்டு போன்களை ஒப்பிடுகையில், ஐபோன்களை புதிதாக பயன்படுத்துபவர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க திணறுவார்கள். உங்கள் ஐபோனில் Setting-க்குள் சென்று Accessibility என்பதை தேர்ந்தெடுங்கள். அதில் Touch-க்குள் சென்று Back Tap-ஐ செலக்ட் செய்து Double Tap அல்லது Triple Tap-இல் Screen Shot-ஐ Assign செய்திடுங்கள். இப்போது போனின் பின்னால் இரு முறை தட்டினாலே ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிடும்.
ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிஷோர் என்பதும், சென்னை OMRல் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. நேற்றைய தினம் அவரின் புகைப்படத்தை ரயில்வே காவல்துறை வெளியிட்டிருந்தது. கடந்த 25ம் தேதி ரயிலில் சென்னை வந்த <<13964303>>பெண் என்ஜீனியர்<<>> பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்கப் பத்திரங்களை (SGB) வெளியிடும் திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2.5% வட்டி, ஜீரோ GST வரி போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ள தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு (8 ஆண்டு காலம்) முதிர்வுத் தொகையை அரசு வழங்க வேண்டியுள்ளது. தங்கம் மதிப்பு (40%) உயர்வு, நிதிச்சுமையால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதால், அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பணத்தை சேர்த்து வைப்பதை விட முதலீடு செய்தால், அது பல மடங்கு பெருகும். டாப் 5 முதலீடுகள்: 1. பங்குகளில் முதலீடு. எந்த பங்கு நல்ல லாபம் தரும் என்பதை பார்த்து அதில் முதலீடு செய்யலாம். 2. தங்கத்திலோ அல்லது தங்கப் பத்திரத்திலோ முதலீடு செய்யலாம். 3. ரியல் எஸ்டேட் முதலீடு. 4. அதிக தொகை இருந்தால் வங்கி இருப்பில் (FD) போடலாம். 5. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
San Franscisco சென்ற முதல் நாளிலேயே நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலீடுகள் கிடைத்துள்ளதாக CM ஸ்டாலின் நெகிழ்ந்துள்ளார். 4,100 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் ₹900 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் உறுதி தெரிவித்தார். மேலும், முதலீட்டை ஈர்க்கும் வேகம் தீவிரப்படுத்தப்படும் என்றும் x பதிவில் கூறியுள்ளார்.
வக்ஃபு வாரிய திருத்த மசோதா 2024 குறித்து நாட்டு மக்களிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கருத்து கேட்டுள்ளது. மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த மசோதா, ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் குழு, பொதுமக்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை தபால் மூலம் அனுப்ப கேட்டு கொண்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?
1. கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம் எது? 2. இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையான பொக்ரானை எந்த ரகசிய குறியீட்டில் அழைத்தார்கள்? 3. எத்தனை வயதுக்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான வேலைகளில் அமர்த்துவதை இந்திய சட்டம் தடுக்கிறது? 4. பூமியின் நுரையீரல் என எதை அழைக்கிறோம் ? விடைகளை கமெண்ட் பண்ணுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
வங்கதேச அணி லேசுப்பட்டது இல்லை என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா எச்சரித்துள்ளார். வங்கதேச அணி வரும் 19ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதுகுறித்து பேசிய ரெய்னா, வங்கதேசத்திடம் சிறந்த சுழல்பந்து வீச்சு உள்ளது. எனவே, சாதாரணமாக கருதக்கூடாது. வங்கதேச தொடர், ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக இந்தியாவுக்கு உதவும் என கூறினார். உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.