India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீட்டுச்சிறையில் இருந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுவிக்கப்பட்டார். மாணவர்கள் போராட்டத்தைத்தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து, ஊழல் வழக்கில் வீட்டுச்சிறையில் இருந்த எதிர்க்கட்சித்தலைவர் கலிதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அதிபர் உத்தரவிட்டார். இதன்பேரில், கலிதா ஜியா விடுவிக்கப்பட்டுள்ளார்.
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு காணொலிகளை திரையிட, அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை உட்பட துன்புறுத்தல்களில் ஈடுபடுவோரை, சட்டத்தின் முன் நிறுத்தித்தண்டனை பெற்றுத்தர முடியும். இதனால், போக்சோ சட்டம் குறித்து NCPCR உருவாக்கியுள்ள எளிமையான விழிப்புணர்வு வீடியோவை, திரையிட அறிவுறுத்தியுள்ளது.
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மிகுந்த சத்தான உணவும் மிக முக்கியம். அதன்படி, * பாலக் கீரை, பரட்டைக் கீரை (kale), வெந்தயக் கீரை மற்றும் கடுகுக் கீரை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கின்றன. * வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ள கேரட் மற்றும் பூண்டு, வெந்தயம், பெருஞ்சீரகம், சீரகம் தாய்பால் சுரப்பை அதிகரிக்கும். * எள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன் கால்சியம் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடியது.
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெளி உலகிற்கு அதிகம் தெரியாவிட்டாலும், ஹமாஸ் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருபவராக அறியப்படும் அவர், இஸ்ரேல் மீது கடந்தாண்டு (அக்.,7) நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அண்மையில், ஈரானில் மொஸாட்டால் கொல்லப்பட்ட ஹனீயேவின் நெருங்கிய நண்பரான இவர், காசாவிலேயே தங்கி, பல ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளே இல்லை என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். X பக்க பதிவில் அவர், ஏழைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளின்றி மருத்துவமனைகள் அலட்சியத்துடன் இயங்குவதாகவும் விமர்சித்துள்ளார். மக்கள் அஞ்சும் அளவிற்கு, இந்த அவல ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் செயலிழந்துள்ளன என்றும், எத்தனையோ குறைகள் தொடர் கதைகளாக உள்ளதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.
G.O.A.T பெயரை தவெகவினர் பயன்படுத்தக்கூடாது என்று விஜய் உத்தரவிட்டுள்ளார். G.O.A.T திரைப்படம் செப்.5ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு தவெகவினர் போஸ்டர், பேனர் ஏதேனும் வைத்தால், அதில் தமிழக வெற்றிக்கழகம் என பதிவு செய்யாமல், விஜய் மக்கள் இயக்கம் என பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். சினிமாவுக்கும், அரசியலுக்கும் வித்தியாசம் காட்ட, அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியதாகத் தெரிகிறது.
விளம்பர நிறுவனங்களின் உலக கூட்டமைப்பு (WFA), தனக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக X தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், டெக்ஸாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளத்தை அமைப்பு ரீதியாக புறக்கணித்ததால், பல விளம்பர நிறுவனங்கள் வெளியேறியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ட்விட்டரை வாங்கிய பின் மஸ்க் செய்த மாற்றங்கள் மற்றும் அவரின் சொந்த சர்ச்சைக்குரிய கருத்துகளால் நிறுவனங்கள் வெளியேறின.
இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவம் துபே நீக்கப்பட்டு, ரியான் பராக் இடம்பெறுவார் எனவும், ஜெய்ஸ்வால் களமிறங்குவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. பும்ரா, ஷமி இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. 27 ஆண்டுகளாக SL-க்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோற்றதே இல்லை என்ற சாதனையை இழக்காமல் இருக்க மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்சி, எஸ்டி உள்ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என, அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்தினார்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா புதிய படத்தில் நடிக்கிறார். அதில் நடிக்க நயன்தாரா ₹20 கோடி கேட்டதாகவும், அப்போது தயாரிப்பு தரப்பில் படம் தொடங்கட்டும், அப்புறம் பேசிக்கொள்ளலாம் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதைக்கேட்டு அப்படத்தில் ஒரு வாரம் நயன்தாரா நடித்த நிலையில், அவர் கேட்ட சம்பளத்தில் பாதியை மட்டுமே தர முடியுமென கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.