India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தங்கம் வெல்வார் என காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பபிதா போகத் தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் இந்திய வீராங்கனையாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று மகிழ்ச்சி தெரிவித்த அவர், இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ள நிலையில் அது தங்கப் பதக்கமாக இருக்க வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் ஆகஸ்ட் 13ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கால் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோருக்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில், இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இறுதிப் போட்டியில் இன்று அமெரிக்காவின் சாரா ஆன் ஹில்டெப்ராண்ட் உடன் மோதவுள்ளார். கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்ற அவர், 4 முறை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பதில் மிக வல்லவரான ஹில்டெப்ராண்ட், வினேஷ் போகத்துக்கு கடும் சவால் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும், வழக்கறிஞராகவும் உள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5 ஆம் தேதி, தனது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடையோரை அஸ்வத்தாமன் சந்தித்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த KKSSR ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.56 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2012இல் அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. 10 ஆண்டுகளை கடந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2022இல் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ₹2 கோடி நிதி வழங்கியுள்ளார். முன்னதாக தென்னிந்திய நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்திருந்தனர். அங்கு கடந்த 30ஆம் தேதி நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 9ஆவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2012இல் ஜெயலலிதா ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. 11 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், கடந்த 2022இல் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் தங்கம் தென்னரசுவை விடுவித்து உத்தரவிட்டது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, சாட்சி விசாரணையைத் தொடங்கவும், தினமும் விசாரணை நடத்தவும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இது, அமைச்சர்கள் இருவருக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. (BVSc&AH) இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர் தரவரிசை பட்டியலும், BTech-உணவுத் தொழில்நுட்பம்/கோழியின தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு தகுதி பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியலும் www.//adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற தளத்தில் வெளியானது.
இலங்கை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில், கோலி புதிய சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளது. அவர் 114 ரன்கள் எடுத்தால், ODI போட்டிகளில் அதிவேகமாக 14,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரை 281 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 13,886 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் சச்சின் (350) மற்றும் சங்ககாரா (378) இன்னிங்ஸ்களில் 14,000 ரன்களை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.