India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே வீழ்ச்சியடைந்து வருகிறது. ரூ.56,000 வரை விற்கப்பட்ட சவரன் தங்கம், பெரும் சரிவை சந்தித்து, இன்று ரூ.50,640-ஆக உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை குறைந்திருப்பது தற்காலிகமானதுதான் என்றும், அடுத்த சில மாதங்களில் ராக்கெட் வேகத்தில் விலை உயரும் எனவும் கூறியுள்ளார். அதனால் இப்போது தங்கம் வாங்குவது நல்லது என்றார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐஏஎஸ் கைலாசநாதன் இன்று பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். குஜராத்தில் பல ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவர். கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற போது, முதல்வராக இருந்த மோடி, அவருக்காக ‘முதல்வர் முதன்மை செயலாளர்’ என்ற பதவியை உருவாக்கி, தனது அலுவலகத்திலேயே வைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் கியூபா வீரர் மிஜைன் லோபஸ் நூனெஸ் புதிய சாதனை படைத்துள்ளார். அவர், 130 கிலோ எடைப்பிரிவு Greco-Roman மல்யுத்தத்தில் அவர், சிலி வீரர் யாஸ்மானி அகோஸ்டாவை தோற்கடித்து தங்கம் வென்றார். இது அவர், தொடர்ச்சியாக வெல்லும் 5ஆவது தங்கம் ஆகும். இதன்மூலம் ஒரே விளையாட்டில் அதிக தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இத்துடன் அவர் தனது ஓய்வையும் அறிவித்தார்.
தேசிய கைத்தறி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்க பதிவில், நமது தேசம் முழுவதும் உள்ள கைத்தறியின் வளமான கலாசாரம் மற்றும் துடிப்பான பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும், கலைஞர்களின் முயற்சிகளை மதிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்போம்’ என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
உடல் எடை காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவரின் உடல் எடை, 100 கிராம் கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளதால், ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தங்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இன்று கைதான அஸ்வத்தாமன், காங்., கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை -குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கட்சிக்கு அவப்பெயரும் உண்டாகும் விதத்திலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் தொடர்புக் கொள்ளக் கூடாது என காங்., கட்சி எச்சரித்துள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்திற்காக இயக்குநர் நெல்சனுக்கு ₹60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது ‘பீஸ்ட்’ படத்தின் கடுமையான தோல்வி, ‘ஜெயிலர்’ படத்தின் மெகா வசூலைத் தொடர்ந்து ஒரு இயக்குநரின் சம்பளம் மெகா உச்சத்தைத் தொடுவதாக அமையும். முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவரும் 2 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சித்தலைமை அறிவித்துள்ளது. சென்னையில் நாளை மறுதினம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என, இருதினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டம் எப்போது நடைபெறும், எதற்காக ஒத்திவைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிடப்படவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.