India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாஜ்மகால் வளாகத்திற்குள் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தாஜ்மகால் இருக்கும் இடத்தில் முன்பு சிவன் கோயில் இருந்ததாகக் கூறி, வலதுசாரி அமைப்பினர் கங்கை நீரை தண்ணீர் பாட்டிலுக்குள் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்ய முயன்றனர். இதுதொடர்பாக 2 இந்துமகாசபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக, தண்ணீர் பாட்டில் எடுத்து வர ASI தடை விதித்துள்ளது.
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபிஐ சின்னத்தையும், அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும், வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. PLS SHARE IT
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் இறுதி போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்து வருவதாக, இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 100 கிராம் எடை கூடிய காரணத்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பயிற்சியாளர்கள் எடையை உறுதி செய்தார்களா? என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஒலிம்பிக்ஸ் சம்மேளனத்திடம், இந்தியா புகாரளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் உடல் எடைக் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தகுதி நீக்கம் தொடர்பாக மேல் முறையீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் உடல் எடையைக் குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்டதால், அவருக்கு நீர்ச்சத்து குறைப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் பயிற்சியால் ஒரே இரவில் 1.85 கிலோ எடையை வினேஷ் குறைத்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு செல்லும் முன்பே வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். 3 முறை ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட அனுபவசாலி, 52 kg பிரிவில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டபோது, எடையை குறைத்து இலக்கை நோக்கி நகர்ந்தவர். ஆனால், ஒரே இரவில் 100 கிராம் எடை அதிகம் எனக்கூறி தகுதி நீக்கம் செய்ததன், பின்னணியை புரிந்து கொள்ளவே முடியவில்லை?.
ஒலிம்பிக்ஸில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்க பதிவில், வினேஷ் நீங்கள் சாம்பியனுக்கெல்லாம் சாம்பியன், இந்தியாவின் பெருமை, ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிப்பவர் என புகழ்ந்துள்ளார். இன்றைய பின்னடைவு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது வருத்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றும் கூறியுள்ளார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவர், கூடுதலாக 100 கிராம் இருந்ததால், அவர் தகுதி இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு வரை இந்தியாவே அவரின் வெற்றிக்காக காத்துக்கிடந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், உடல் எடையை காரணம் காட்டி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 140 கோடி இந்தியர்களின் பதக்க கனவு சிதைந்துள்ளது.
செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க ED-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ED வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் இருதரப்பும் காரசாரமாக தங்களது வாதங்களை முன் வைத்தன. இதனையடுத்து, ED பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Sorry, no posts matched your criteria.