India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலை தேடுவோருக்கு அவர்களுக்கான வேலையைத் தேடி வழங்கும் தனியார் இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. அதுபோல, தமிழக அரசும் தனியாக இணையதளத்தை நடைமுறையில் வைத்துள்ளது. <
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர். காத்மாண்டு அருகே சென்றுகொண்டிருந்த சிறிய ரக ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நுவாகாட் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த கோர சம்பவத்தில் விமானி உள்பட அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திடம் அரையிறுதியில் தோற்ற கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் கியூப வீராங்கனை இறுதிப் போட்டியில் களம் இறங்கவுள்ளார். அதேநேரம், தகுதிநீக்கம் குறித்து ஒலிம்பிக் கமிட்டியிடம் மேல் முறையீடு செய்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பள்ளிக் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது வழக்கமாகி விட்டது. இந்நிலையில், பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் சென்று ரத்த அழுத்தம் முதல் புற்றுநோய் வரை பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பதால் இதிலிருந்து 90% தப்பலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் மிகவும் துரதிருஷ்டமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்கம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தை கனக்கச் செய்துள்ளது என்று வருத்தம் தெரிவித்த அவர், தோற்றாலும் வினேஷ் போகத் சாம்பியன் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார். பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர், உடல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தெலங்கானா, ஒடிஷா, அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 14ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
விமானம், பயணிகளின் பாதுகாப்புக்காக இ-சிகரெட், லைட்டர், பவர் பேங்க், ஸ்பிரே பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய்க்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா? தேங்காய்களில் அதிக எண்ணெய் சத்து உள்ளது. பயணிகள் அவற்றை எடுத்து சென்றால், அதீத வெப்பத்தால் தீப்பற்றி பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம், வெளிநாடுகளில் மட்டும் ஆக. 9ஆம் தேதி முதல் ‘சிம்ப்ளி சவுத்’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த 2023 டிசம்பரில் வெளியான இப்படத்தில், ராமர் அசைவம் சாப்பிட்டதாக வசனம் இடம்பெற்றதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் இருந்து படத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில் புலந்த்சாகர் மாவட்டத்தின் தார்பா பகுதியில் அரசு சுகாதார மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில்தான் அப்பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்நிலையில், அந்த மையத்தில் தடுப்பூசிகளை வைப்பதற்காக உள்ள ஃப்ரிட்ஜ்களில் பீர் கேன்கள் இருக்கும் வீடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
அழகாக இருக்கிற ஒரே காரணத்திற்காக ஒலிம்பிக்ஸில் இருந்து பராகுவே நீச்சல் வீராங்கனை லுவானா அலென்சோ, அவரது நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டிருக்கும் வினோதம் நடந்துள்ளது. இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெறாதபோதிலும், அவர் ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் 11ஆம் தேதி வரை தங்க முடியும். ஆனால் அபரிமிதமான அழகு பிற வீரர்களின் கவனத்தை திசை திருப்புவதாகக் கூறி, அவரது நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.