news

News August 7, 2024

Olympics: இந்திய அணி தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியுள்ளது. காலிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனைகளை, இந்திய வீராங்கனைகள் ஸ்ரீஜா, மனிகா பத்ரா, அர்ச்சனா காமத் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் டேபிள் டென்னிஸில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

News August 7, 2024

சரிவில் இருந்து தப்பித்த பங்குச்சந்தை

image

மூன்று நாட்களாக தொடர் சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. வர்த்தக நேர முடிவில், நிஃப்டி 304 புள்ளிகள் உயர்ந்து, 24,297 புள்ளிகளில் வர்த்தம் ஆனது. சென்செக்ஸ் 79,468 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஜப்பான் பங்குச்சந்தை வீழ்ந்ததன் காரணமாக சரிந்த இந்திய சந்தைகள், இன்னும் ஒரு வாரத்தில் பழைய நிலைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News August 7, 2024

ஆக.16 அதிமுக அவசர செயற்குழு கூட்டம்

image

அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. நாளை மறுநாள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தேதி குறிப்பிடாமல் இன்று அதிமுக தலைமை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News August 7, 2024

இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்

image

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக அங்குள்ள தூதரக ஊழியர்களை இந்தியா வெளியேற்றியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அங்கு குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகள், இந்திய உயர் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங், ராஜ்ஷாஹி, குல்னா மற்றும் சில்ஹெட் போன்ற நகரங்களில் இந்திய தூதரகங்கள் உள்ளது.

News August 7, 2024

Olympics: ஒரே இரவில் எடை அதிகரிப்பு: சஞ்சய் சிங்

image

ஒரே இரவில் வினேஷ் போகத் உடல் எடை அதிகரித்ததாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார். கடந்த 2 நாள்களாக வினேஷ் போகத் உடல் எடை 50 கிலோவில் சரியாக இருந்ததாகவும் தெரிவித்தார். எடை அதிகரிப்புக்கான காரணத்தை போகத்தின் பயிற்சியாளரும், ஊட்டச்சத்து நிபுணரும் தான் கூற முடியும் என்ற அவர், தகுதி நீக்கத்துக்கு எவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பது என்று ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

News August 7, 2024

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: மத்திய அரசு விளக்கம்

image

வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக, உலக மல்யுத்த சம்மேளனத்திடம் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி பேசியுள்ளதாக கூறிய அவர், வினேஷ் போகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 7, 2024

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி?

image

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி இருப்பதாக குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சந்தேகம் எழுப்பியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில், மகளிருக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜயேந்தர், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததற்காக எல்லாம் தகுதிநீக்கம் செய்ய மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

News August 7, 2024

140 கோடி இந்தியர்களின் சாம்பியன்: திரௌபதி முர்மு

image

வினேஷ் போகத் 140 கோடி இந்திய மக்களின் இதயங்களில் சாம்பியனாக இருப்பதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் சிலிர்க்க வைத்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். மேலும் இந்தியப் பெண்களின் விடாமுயற்சியை வினேஷ் போகத் வெளிப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், எதிர்காலத்தில் பல விருதுகளை பெறுவார் எனவும் வாழ்த்தியுள்ளார்.

News August 7, 2024

மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஐகோர்ட்

image

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு தமிழர்கள்தான் காரணம் என்று ஆதாரமின்றி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!