India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி பணி நாளில், அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆகஸ்ட் மாதத்திற்கான பொருள்களை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் இன்று வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோ – திபெத் படையில் காவலர் பதவிக்கு (சமையல் சேவை ) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 819 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயது வரம்பு 18-25 ஆகும். விண்ணப்ப பதிவு வரும் 2ம் தேதி ஆன்லைனில் தொடங்கும். வேலைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 1ம் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் தகவலை itbpolice. nic. in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை பகிருங்கள்.
ரஜினியை வைத்து DMK மூத்த தலைவர்கள் அவமானப்படுத்த பட்டு உள்ளதாக ADMK விமர்சித்துள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது குறித்து ADMK துணை பொது செயலாளர் K B முனுசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கருணாநிதி தனது மகன் ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டினார், இப்போது ஸ்டாலின் தன் மகன் உதயநிதிக்கு பட்டம் சூட்ட போகிறார் என்று கூறினார். முனுசாமி குற்றசாட்டு பற்றி உங்கள் கருத்து என்ன?
வங்கதேச அகதிகள் கோவையில் தஞ்சமடைவதை தடுக்குமாறு, CM ஸ்டாலினை அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், “எல்லை வழியாக நுழைய முயன்ற வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் வேலைக்கு சேரும் நோக்கில் வந்ததாக கூறினர்” எனத் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக சில நாள்களுக்குமுன் வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, செப்.1-5ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, திருவள்ளூரில் சில இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது.
*கேலி செய்தல்-4 OF TNP OF EVT ACT 1998
*மானபங்கம் செய்தல்-354 IPC
*வரதட்சணை கேட்டல்-4 OF DP ACT 1961
*வரதட்சனை கொடுமை இறப்பு-304 (B) IPC
*பெண்களை கற்பழித்தல்-376 IPC
*மைனர் பெண்ணை கடத்தினால்-366(A) IPC
*விருப்பமின்றி கருவை கலைத்தால்-312 IPC
*கர்ப்பமாக்கிவிட்டு கைவிட்டால்-417, 420 IPC
*மனைவி உயிருடன் இருக்கும் போது 2ஆவது திருமணம் செய்தல்-494 IPC *திருமணம் ஆன பெண்ணை கொடுமை செய்தல்-498 (A) IPC
GPay செயலியில் <<13877891>>UPI Circle<<>>, UPI Voucher போன்ற புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. UPI Voucher வசதியில், நீங்கள் விரும்பும் நபருக்கு ப்ரீபெய்டு Voucherகளை அவர்களது மொபைல் எண்ணுக்கு அனுப்ப முடியும். அதை பயன்படுத்தி அவர்கள் எந்தவொரு UPI செயலி மூலமும் தேவையான பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இதற்காக அவர்கள் UPI உடன் வங்கி கணக்கை இணைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
TNக்கு மேலும் 2 ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை, PM மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
*எழும்பூர் (5 AM)-நாகர்கோவில் (1.50 PM)
*நாகர்கோவில் (2.20 PM)-எழும்பூர் (11 PM)
*STOPS: தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை.
*மதுரை (5.15 AM)-பெங்களூரு (1 PM)
*பெங்களூரு (1.30 PM)-மதுரை (9.45 PM)
*STOPS: திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், K.R.புரம். #SHARE NOW.
*3-5 AM-மூச்சுப் பயிற்சி, தியானம்
*5-7 AM-காலைக் கடன்களை கழிக்கும் நேரம்
*7-9 AM-சாப்பிடும் நேரம்
*9-11 AM-செரிமான நேரம் (சாப்பிடுதல் கூடாது)
*11AM – 1PM-இதய நோயாளிகள் கவனமாக இருக்கும் நேரம்
*1-3 PM-மிதமான சிற்றுண்டி
*3-5 PM-நீர்க்கழிவுகளை வெளியேற்றும் நேரம்
*5-7 PM-தியானம், இறை வழிபாடு
*7-9 PM-இரவு உணவு நேரம் *9-11 PM-அமைதியாக உறங்கலாம் *11PM – 1AM-அவசியம் உறங்கவும் *1-3 AM-கட்டாயம் உறங்கவும்
*எட்டுத்தொகை: ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றினை, பரிபாடல், பதிற்றுப்பத்து.
*பத்துப்பாட்டு: திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம், மதுரை காஞ்சி, முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை, பெரும்பாணாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை. *ஐஞ்சிறு காப்பியங்கள்: உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூனாமணி, நீலகேசி.
Sorry, no posts matched your criteria.