news

News August 7, 2024

கனமழை பெய்வதால் சாலைகளில் வெள்ளம்

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், ஈரோடு, சேலம், தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

News August 7, 2024

முதல் ஐந்து இடங்களில் 3 இந்திய வீரர்கள்

image

ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் முதல் 5 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் அடுத்தடுத்து இடம்பிடித்துள்ளனர். கில், ரோஹித், கோலி ஆகியோர் முறையே 2,3 மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளனர். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார். ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் 16 மற்றும் 20ஆவது இடத்தில் உள்ளனர்.

News August 7, 2024

கலவரத்தில் நடிகர், தந்தை அடித்துக் கொலை

image

வங்கதேசத்தில் நடந்து வரும் கலவரத்தில் நடிகர் ஷாண்டோ கான், தயாரிப்பாளரும் அவரது தந்தையுமான சலீம் கான் கொலை செய்யப்பட்டது, இந்திய சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஷாண்டோவின் தந்தை, தெலுங்கில் பல படங்களுக்கு இணை தயாரிப்பாளராக இருந்து வந்தார். ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், அவர்கள் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.

News August 7, 2024

ஆண்களையும் தாக்கும் மார்பக புற்றுநோய்: பகீர் ரிப்போர்ட்

image

இதுவரை பெண்களை மட்டுமே தாக்கும் எனக் கருதப்பட்ட மார்பக புற்றுநோய், தற்போது ஆண்களையும் அதிக அளவில் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. மார்பக நோய் மைய நிறுவனர் பில்லரிசெட்டி இது குறித்து கூறுகையில், உலக அளவில் ஒரு சதவீத ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், விழிப்புணர்வு இல்லாததால் புற்றுநோய் முற்றிய பிறகே பலரும் மருத்துவரை நாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News August 7, 2024

செந்தில் பாலாஜியை நாளை ஆஜர்படுத்த உத்தரவு

image

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், செந்தில் பாலாஜியை நாளை ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு நேரில் அவரை ஆஜர்படுத்த முடியாவிட்டால், காணொலி மூலம் விசாரணை நடைபெறும் என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவர் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

News August 7, 2024

பயிற்சியாளர்களே பொறுப்பு: போகத் உறவினர் குற்றச்சாட்டு

image

வினேஷ் போகத்தின் எடை அதிகரித்ததற்கு அவரது பயிற்சியாளர்கள்தான் காரணம் என்று அவரது உறவினர் மகாவீர் சிங் போகத் தெரிவித்துள்ளார். அதில் “நேற்று வரை சரியாக இருந்த உடல் எடை, இன்று 100 கிராம் அதிகரித்திருக்கிறது என்றால் அதுகுறித்து பயிற்சியாளரும், மருத்துவரும் தான் பதில் சொல்ல வேண்டும். வினேஷ் தங்கம் வெல்வார் என்று நாடே எதிர்பார்த்தது.” என்று மகாவீர் காட்டமாக பேசியுள்ளார்.

News August 7, 2024

வினேஷ் போகத் தகுதியிழப்பு நமக்கு பாடம் – ஹேமமாலினி

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து பாஜக எம்.பி. ஹேமமாலினி கூறிய கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதில், 100 கிராம் எடையால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது விசித்திரமாக உள்ளது என்றார். மேலும், பெண்களுக்கும், கலைஞர்களுக்கும் இது ஒரு பாடம் எனக் கூறிய ஹேமமாலினி, எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

News August 7, 2024

வினேஷ் போகத்துடன் பி.டி.உஷா சந்திப்பு

image

வினேஷ் போகத்துடன், இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பி.டி.உஷா சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், கூடுதல் எடை காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை நேரில் சந்தித்த பி.டி.உஷா, விரைவில் நலம்பெற வாழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 7, 2024

போட்டிகளின் விதி என்பது அனைவருக்கும் ஒன்று தான்

image

வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்ததில் எந்த மாற்றமும் இல்லை என சர்வதேச மல்யுத்த சங்கம் தெரிவித்துள்ளது. 100 கிராம் எடை மட்டும்தான் அதிகம் என்பதற்காக போகத்தை அனுமதிக்க முடியாது என்றும், ஒருவருக்கு சலுகை அளித்தால் மற்ற வீரர்களுக்கும் சலுகை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மல்யுத்த போட்டிகளின் விதி என்பது அனைவருக்கும் ஒன்று அதை மாற்ற முடியாது என கூறியுள்ளது.

News August 7, 2024

சந்திரயான் 3: விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிப்பு

image

சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ‘ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் சந்திரயான்-3 திட்ட இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!