India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பல போராட்டங்களைக் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தீரம் பாராட்டுதலுக்குரியது. பதக்கங்கள் வரும் போகும்; நம் நாட்டின் வீரர், வீராங்கனைகள் என்றுமே நமக்கு தங்கங்கள்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே. நீங்கள் பலரை ஊக்குவித்திருக்கிறீர்கள். உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளக்கப்படுவதல்ல. சாதனைகளை முறியடிக்கும் வகையிலான அன்பை நீங்கள் சேகரித்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ODI தொடரில், 3 போட்டிகளிலும் இந்தியா ஆல்அவுட்டாகியுள்ளது. முதல் போட்டியில், 231 ரன்கள் இலக்கை துரத்திய IND, 230 ரன்களுக்கு ஆல்அவுட்டானதால் போட்டி டை ஆனது. 2ஆவது போட்டியில் 241 ரன்கள் இலக்கை துரத்தி, 208 ரன்களுக்கு ஆல்அவுட்டான IND, 3ஆவது போட்டியில் 249 ரன்கள் இலக்கை துரத்தி 138 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால், இந்திய அணி மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி சம்பளம் ஏதும் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 முதல் 2020 வரை, அவர் ஆண்டுக்கு ₹15 கோடி சம்பளமாக பெற்றார். அதன்பின், கொரோனா காலத்தில் நஷ்டத்தை தவிர்க்க சம்பளத்தை விட்டுக்கொடுத்த அவர், இன்று வரை ஏதும் பெறவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அவருடைய மகன்கள், மகள் மூவரும் ஆண்டுக்கு தலா ₹1 கோடி பெற்றுள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் துனித் வெல்லாலகே ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது இந்தியாவுக்கு எதிராக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை (2) 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
2024-25ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை (ஆக. 8) கடைசி நாளாகும். இதற்கு <
யூடியூபர் பிரியாணி மேனை, மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவிற்கு வரும் பெண்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட புகாரில்,, சில நாள்களுக்குமுன் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கிறிஸ்தவ மதம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பேசியதாக கொடுக்கப்பட்ட மற்றொரு புகாரில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நம் உடலில் 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்யும் கல்லீரலை நாம் தினசரி சாப்பிடும் உணவின் மூலமாகவே சீராக வைத்திருக்கலாம். திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாப்பதுடன், அதில் ஏற்படும் வீக்கங்களை கட்டுப்படுத்துகிறது. பீட்ரூட் கல்லீரல் பாதிப்பை குறைத்து காயங்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மாதுளை கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்துள்ளது. இலங்கை நிர்ணயித்த 249 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 35, வாஷிங்டன் சுந்தர் 30, விராட் கோலி 20, ரியான் பராக் 15 தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இந்தியா 26.1 ஓவரில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து, ODI தொடரையும் இழந்துள்ளது.
அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 2002-2006 வரையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ₹4.90 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து, அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.