India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து பேசிய ரோஹித் ஷர்மா, “சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்கள் கவலைக்குரிய வகையில் இருப்பதாக நினைக்கவில்லை. ஆனால், திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும். இந்த தொடரில் எங்களை விட இலங்கை சிறப்பாக செயல்பட்டது. எல்லா பெருமையும் அவர்களையே சாரும்” எனக் கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் கோல்ப், ஆண்கள் ஈட்டி எறிதல், பெண்கள் 100 மீட்டர் தடை ஓட்டம் ரிபிசாஜ், ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். பிற்பகல் 02:05 மணியளவில் நடைபெறவுள்ள ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது. ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், இந்திய ஆண்கள் அணி களமிறங்கவுள்ளது.
சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாநில அரசுகளுக்கு பங்கு தரப்படுவதில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “2023-24இல் இந்திய அளவில் ₹55,844 கோடி (தமிழகத்தில் மட்டும் ₹4,221 கோடி) சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இந்தப் பணம் மீண்டும் இந்திய ஒருங்கிணைந்த நிதிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
பருவமழைக் காலத்தில் குளிர் காரணமாக ஏற்படும் மூச்சிரைப்பை சரிசெய்யும் ஆற்றல் நொச்சி இலைக்கு இருப்பதாக அகத்தியரின் பாடல் கூறுகிறது. பாலிஃபீனால்கள், சைடோஸ்டீரால், வைடெக்ஸிகார்பின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள நீல நொச்சியின் இலைகளை மிளகு, திப்பிலி, கிராம்பு ஆகியவற்றுடன் சேர்த்து நீரிலிட்டு, கொதிக்க வைத்துக் குடிநீராக பருகினால் உடல் வலி, இருமல், குளிர்சுரம், தலைவலி, சோர்வு நீங்குமாம்.
நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு தர நிதி இல்லை, மகளிர் உதவித்தொகை போன்ற இலவச திட்டத்திற்கு நிதி இருக்கிறதா என மஹாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் நிலத்தில் பாதுகாப்பு துறை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதற்கு உரிய பதில் தாக்கல் செய்யாவிட்டால், தலைமைச் செயலரை வரவழைக்க நேரிடும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது.
விராட் கோலியை விட ரோஹித் ஷர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது ஜாஹித் புகழாரம் சூட்டியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், “கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்பதை யாரும் மறுக்க முடியாது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக ஆடும் தைரியம் கொண்ட ரோகித் சிறந்தவர். லென்த்தை பிடித்து அடிக்கக் கூடிய ஆற்றலும் அவர் கொண்டுள்ளார்” எனப் பாராட்டியுள்ளார்.
➤1509 – கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார். ➤1848 – பிரிட்டனுக்கு எதிராக மாத்தளையில் நடந்த கிளர்ச்சியின் தலைவர் வீரபுரன் தூக்கிலிடப்பட்டார். ➤1916 – ஜப்பானியத் தொழிலதிபர் யமஹா மறைந்த நாள். ➤1908 – ரைட் சகோதரர்கள் பிரான்ஸில் முதலாவது வான் பயணம் மேற்கொண்டனர். ➤1942–பம்பாயில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. ➤1947–பிறை கொடி பாகிஸ்தானின் தேசியக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம் என்று காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் நிலைமையை மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாம் சாதாரணமாகத் தோன்றினாலும், வங்கதேச மக்களின் மனநிலையில்தான் இந்தியர்களும் இருக்கின்றனர்” எனக் கூறியுள்ளார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை 100% மாணவர் சோ்க்கையை எட்ட வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஆர்டிஇ சட்டத்தின் கீழ், நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% கட்டணமில்லா இடங்கள் ஒதுக்கீடு செய்வதை சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை எனக் கூறிய அவர், எல்லோருக்கும் 12ஆம் வகுப்பு வரை கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரது கடமை எனக் கூறியுள்ளார்.
தொழில்துறையை திமுக அரசு படுபாதாளத்திற்கு தள்ளியதாக இபிஎஸ் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் TRB ராஜா, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இபிஎஸ் பேசுகிறார். கடந்த 3 ஆண்டுகளில், தமிழகத்தில் ₹10 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் உறுதி செய்து, 31 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். தமிழகம் விரைவில், ‘1 டிரில்லியன்’ என்ற பொருளாதார இலக்கை எட்டும்” எனப் பதிலளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.