India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரிய இயக்குநர்களுக்கு நான் தேவைப்படுவது இல்லை என்பதால் யாரும் என்னை அணுகுவது இல்லை என நடிகர் அருள்நிதி கூறியுள்ளார். ஒரே ஜானரில் படம் நடிப்பதால், த்ரில்லர் மற்றும் கிராமப்புற கதைகளே வருவதாகவும் விரைவில் தன்னுடைய படங்களின் ஜானர் மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமுள்ளதாகவும் அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை தொடர்ந்து, குறைந்து வருகிறது. ஆடி மாதத்தையொட்டி கடந்த 4 வாரங்களில் மட்டும் விலை ₹50 வரை குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்) விலை கிலோவுக்கு ₹19 குறைந்து ₹75ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில்லறை விற்பனையில் 1 கிலோ கோழி இறைச்சி ₹140 முதல் ₹180 வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்று இறுதிப்போட்டியில் களம் இறங்குகிறார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அவர் தங்கம் வென்று சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். ஒலிம்பிக்ஸ் & உலக சாம்பியனான அவர், மீண்டும் அவர் மகுடம் சூடினால், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரு தங்கம் வென்ற முதல் இந்தியர் & ஈட்டி எறிதலில் இரு தங்கத்தை வென்ற 5ஆவது வீரர் என்ற பெருமைகளை அடைவார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். உள்ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை சாதகமாக எடுத்து, இக்கணக்கெடுப்பை நடத்த அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், அந்தந்த சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு அளிக்கவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
மகேந்திரவர்ம பல்லவரால் நிர்மாணிக்கப்பட்ட முதல் குடவரை விநாயகர் கோவில் என்ற பெருமைக்கு உரியது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில். 1,600 ஆண்டுகள் பழமையான அர்ச்சுன வனத்தலமான இக்கோயிலுக்கு சதுர்த்தி நாளில் (இன்று), விரதமிருந்துச் சென்று, துதிக்கை வலம் சுழித்தபடி அருளும் கணபதிக்கு அருகம்புல் மாலை சாற்றி, கொழுக்கட்டைப் படைத்து வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில், 3 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 67வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 27 தங்கம் உள்பட 94 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா (25 தங்கம் உள்பட 65 பதக்கங்கள்) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா (18 தங்கம் உள்பட 41 பதக்கங்கள்) 3வது இடத்திலும், பிரான்ஸ் (13 தங்கம் உள்பட 51 பதக்கங்கள்) 4வது இடத்திலும், பிரிட்டன் (12 தங்கம் உள்பட 49 பதக்கங்கள்) 5வது இடத்திலும் உள்ளன.
அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் சதி திட்டம் தீட்டி, ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதுவரை கைதானவர்களில், வழக்கறிஞர் அருள், அவரது கூட்டாளி சதீஷ்- திமுக, வழக்கறிஞர் ஹரிஹரன்- தமாகா, அஞ்சலை, செல்வராஜ்- பாஜக, மலர்கொடி, ஹரிதரன்- அதிமுக, நேற்று கைதான அஸ்வத்தாமன் – காங்கிரஸை சேர்ந்தவர் என்பதால், அனைத்து கட்சியினரும் சம்பந்தப்பட்டதாக இவ்வழக்கு மாறியுள்ளது.
2024-25ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே (ஆக. 8) கடைசி நாளாகும். இதற்கு www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யும்படி மருத்துவக் கல்வி இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும், அவர்கள் கட்சியினரால் தனி பெயருடன் அழைக்கப்படுகின்றனர். இதுபோல், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை, அவரின் பத்திரிகையில் தங்க மகன் என்று குறிப்பிட்டே செய்தி வருகிறது. அதாவது, அவர் அறிக்கை வெளியிட்டாலும், பேட்டியளித்தாலும் தங்க மகன் ஓபிஎஸ் என்று குறிப்பிட்டு செய்திகள் வருகிறது. இதைக்கண்ட அதிமுகவினர் கேலி கிண்டல் செய்கின்றனர்.
நடிகைகள் போட்டோஷுட் நடத்தி தன்னை பொலிவுடன் காட்டிக்கொள்வதில் தவறு என்ன இருக்கிறது என்று ’96’ பட நடிகை கவுரி கிஷன் கேள்வி எழுப்பியுள்ளார். ஹோம்லி, கிளாமர் என நடிகைகளை பிரித்து பார்ப்பதே தனக்குப் பிடிக்காது எனக் கூறிய அவர், நல்ல கதைக்கு எது தேவையோ அதைச் செய்வேன் எனக் கூறியுள்ளார். அதேநேரத்தில், தேவை இல்லாதவற்றை சகித்துக் கொண்டு, சிரித்தபடி தான் ஏற்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.