news

News August 8, 2024

பதிவு செய்ய தவறினால் ₹1 லட்சம் அபராதம்!

image

பான் மசாலா, குட்கா, புகையிலை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் இயந்திரங்களை GST அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக GST சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக CBIC வரி வாரியம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள், இயந்திரங்களைப் பதிவு செய்ய தவறும்பட்சத்தில் அக்.,1ஆம் தேதி முதல் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

News August 8, 2024

SBI வங்கியில் 1,040 வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் காலியாக உள்ள 1,040 சிறப்பு கேடர் அதிகாரிகள் (SCO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக. 8) கடைசி நாளாகும். இதன்கீழ், சென்ட்ரல் ரிசர்ச் குழு, ரிலேஷன்ஷிப் மேனேஜர், இன்வெஸ்ட்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விருப்பம் உள்ளோர், SBI வங்கியின் sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News August 8, 2024

நாக சைதன்யா, சோபிதாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்

image

நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தெரிகிறது. இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாள்களாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை சமந்தாவை மணந்த நாக சைதன்யா 2021ல் விவாகரத்து பெற்றார்.

News August 8, 2024

10 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்

image

கட்டட விதிகளை மீறியதாக டெல்லியில் 10 ஐஏஎஸ் பயிற்சி மையங்களின் அடித்தள பகுதிகள், நூலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீற நினைக்கும் பயிற்சி மையங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என மேயர் ஷெல்லி ஓபராய் எச்சரித்துள்ளார். சில நாள்களுக்கு முன், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

News August 8, 2024

தபால் துறை வேலைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…

image

தபால் துறையில் 44,228 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு விண்ணப்பித்தபோது அளித்த தகவலை 6ஆம் தேதி முதல் இன்று வரை திருத்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆதலால் <>indiapostgdsonline.gov.in <<>> தளத்தில் இன்றைக்குள் திருத்தலாம் என தபால் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிரலாமே. SHARE IT

News August 8, 2024

நிதி வழங்குவதில் வேறுபாடு ஏன்? (1/2)

image

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படும் மாநில அரசுகள் கோரும் தொகைக்கும், மத்திய அரசு ஒதுக்கும் நிதிக்கும் இடையே பெரும் வேறுபாடு காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்று விரிவாக பார்ப்போம். பேரிடர் நிவாரண நிதி என்பது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. நீண்ட கால மறுவாழ்வு & மறுகுடியேற்ற பணிகளுக்காக அல்ல.

News August 8, 2024

நிதி வழங்குவதில் வேறுபாடு ஏன்? (2/2)

image

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகள், மத்திய உள்துறை அமைச்சக இணையதளத்தில் உள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு தனது பங்கை 2 சமமான தவணைகளாக மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. முதல்கட்டமாக வழங்கப்படும் இந்த நிதி பங்களிப்பானது, நிதிக்குழு பரிந்துரைகள் அடிப்படையில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

News August 8, 2024

திருச்சியில் அடுத்த மாதம் விஜய் கட்சி மாநாடு?

image

திருச்சி பொன்மலையில் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவரது கட்சியின் முதல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் வேலை தீவிரமாக நடந்து வந்தது. தற்போது அந்த மாநாட்டுக்கு திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தை தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேர்வு செய்து விட்டதாகவும், விரைவில் மாநாடு பணி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News August 8, 2024

OLYMPICS: சர்ச்சையில் சிக்கிய மற்றொரு இந்திய வீராங்கனை

image

பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து இந்திய வீராங்கனை ஆன்டிம் பன்கல், அவரது பயிற்சியாளர் வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்டிம் பன்கலின் அடையாள அட்டையுடன் அவரது சகோதரி ஒலிம்பிக் கிராமத்திற்குள் சென்றதால், சர்ச்சை எழுந்தது. இதனால், விதிகளை மீறியதாக ஆன்டிம் பன்கல், அவரது பயிற்சியாளர் அங்கீகாரத்தையும் ரத்து செய்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம், அவர்களை வெளியேற்றியது.

News August 8, 2024

இந்தியாவிற்கு மேலும் ஒரு சோகம்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீராங்கனை மீரா பாய் சானு, நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 3ஆவது இடம் பிடித்த தாய்லாந்து வீராங்கனை கம்பயொ, 200 கிலோ எடையை தூக்கிய நிலையில், மீரா 199 கிலோ எடையை தூக்கி 4ஆவது இடம் பிடித்தார். 1 கிலோ எடையில் பதக்க வாய்ப்பு பறிபோனது. டோக்யோ ஒலிம்பிக்ஸில் மீரா வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!