news

News August 8, 2024

மாணவர்களுக்கு ரூ.1,000 திட்டம் நாளை தொடக்கம்

image

அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். கோவையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தால் 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இந்தத் திட்டத்துக்காக இந்தாண்டு ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News August 8, 2024

தமிழக பாஜகவுக்கு செயல் தலைவர்?

image

தமிழக பாஜகவுக்கு புதிதாக செயல் தலைவர் நியமிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை மேற்படிப்புக்காக 6 மாதம் வெளிநாடு செல்வதாகச் சொல்லப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அண்ணாமலையே தலைவராக நீடிப்பார். ஆனால் கட்சிப் பணிகளை தமிழகத்தில் இருந்து மேற்கொள்ள செயல் தலைவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், யார் அப்பதவிக்கு வருவார் எனத் தகவல் இல்லை.

News August 8, 2024

அடுத்த ஆண்டு திருமணம்: பிரியா பவானி சங்கர்

image

அடுத்த ஆண்டு தனது காதலரை திருமணம் செய்ய இருப்பதாக பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். செய்திவாசிப்பாளர், நாடக நடிகை என டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி திரைத்துறைக்கு வந்த பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டபோது எப்போது திருமணம் எனக் கேட்கப்பட்டதற்கு, அடுத்த ஆண்டு என பதிலளித்தார்.

News August 8, 2024

மீனவர்கள் பாதுகாப்பு: ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

image

மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர், கடற்கொள்ளையர்கள் தாக்கி வருவதால், அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். அத்துடன், மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

News August 8, 2024

ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார்: தாய் சரோஜ்

image

ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தருவார் என தாயார் சரோஜ் தேவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீரஜ் கடுமையான பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும், அவர் நிச்சயம் தங்கம் வெல்வார் என்றும் தெரிவித்தார். நீரஜ் சோப்ரா இன்றிரவு 11 மணிக்கு நடைபெறும் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க உள்ளார்

News August 8, 2024

தேர்தலில் போட்டியிடுவதற்கான 2 குழந்தைகள் கொள்கை ரத்து

image

ஆந்திராவில் 2 குழந்தைகள் பெற்றால் மட்டுமே உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியும் என்ற விதியை நீக்கி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, கடந்த 1994ஆம் ஆண்டில் 2 குழந்தைகள் திட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.5% ஆக குறைந்த நிலையில், குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க, அந்த விதி தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

News August 8, 2024

புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

image

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா (80) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2000 முதல் 2011ஆம் ஆண்டுவரை முதல்வராக இருந்த அவர், முதுமை, உடல்நலக் கோளாறு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வந்தார். நாள்பட்ட நுரையீரல் தொற்றால் வீட்டிலேயே ஓய்வில் இருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

News August 8, 2024

மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

image

இலங்கை கடற்படையினரின் அராஜகம் எல்லை மீறும் நிலையில், மறுபுறம் அந்நாட்டு கடற்கொள்ளையர்களின் அட்டூழியமும் அதிகரித்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஒரு மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News August 8, 2024

வினேஷ் போகத் ஓய்வு அறிவிப்பில் மாற்றம்?

image

வினேஷ் போகத் இன்று அதிகாலை ஓய்வை அறிவித்த நிலையில், கோபத்தின் வெளிப்பாடுதான் ஓய்வு அறிவிப்பு என அவரது சிறுவயது பயிற்சியாளரும், உறவினருமான மகாவீர் போகத் தெரிவித்துள்ளார். வினேஷை நேரில் சந்தித்து ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்துவதாகக் கூறிய அவர். வினேஷும், சாக்‌ஷியும் அடுத்த தலைமுறை பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கிற்கு தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

News August 8, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதுத் தகவல்

image

ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதில் புதுத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் எம்பி சீட் கேட்டு காங்கிரஸில் அஸ்வத்தாமன் முயற்சித்த நிலையில், அவரை ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டியதாக போலீசார் கைது செய்தனர். இதனால் வாய்ப்பு பறிபோனது. இதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என கருதி ரவுடிகளுடன் சேர்ந்து கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!