India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தரப் பிரதேசம் பரேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 45 – 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த 14 மாதங்களில் மட்டும் 9 பெண்கள் இதுபோல் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் வயல்வெளிகளில் வீசப்பட்டுள்ளன. கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால் குற்றவாளி சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என முடிவு செய்து, அவனை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
இலங்கை அணியிடம் ஒருநாள் தாெடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், பலரும் அணி வீரர்களை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தோல்விக்குப் பிறகு வீரர்களிடையே கம்பீர் பேசியதாகவும், அப்போது ரோஹித், கோலி தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளான ரஞ்சி, துலிப், விஜய் ஹசாரே ஆகியவற்றில் நிச்சயம் விளையாட வேண்டும். அப்போதுதான் அணியில் இடம் அளிக்கப்படுமென எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் புதிய படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிறுவர்களை வைத்து இயக்கிய ‘வாழை’ திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். நடிகர் கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ‘கைதி 2’ படத்திற்கு பிறகு மாரி செல்வராஜுடன் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
கிரெடிட் கார்டில் விதிக்கப்படும் அதிக வட்டி விகிதங்கள் முக்கிய பிரச்சனையாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். தனிநபர் கடன்களில் 10-15% வட்டி இருக்கும் நிலையில், கிரெடிட் கார்டுகளில் 30-42 வரை வட்டி உயர வாய்ப்புள்ளது. கிரெடிட் கார்டு பில்லில் Minimum Amount Due செலுத்தினால் மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. மாறாக முழு நிலுவைத் தொகைக்குமான வட்டி விதிக்கப்படுகிறது.
நடிகர் தனுஷின் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது “குபேரா” படத்தில் நடித்து வரும் தனுஷ், இந்தியில் “தேரே இஸ்க் மே” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதில் கதாநாயகியாக பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனோன் நடிக்க இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க முதல்வராக 10 ஆண்டுகள் (2000-2011) பதவியில் இருந்த புத்ததேவ் <<13804476>>பட்டாச்சார்யா<<>>, அம்மாநிலத்தில் இடதுசாரி அரசின் கடைசி முதல்வர் ஆவார். 1977-2000 வரை முதல்வராக இருந்த ஜோதிபாசு உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்த நிலையில், முதல்வரான இவர், 2011வரை ஆட்சியில் இருந்தார். 2011இல் இவரது ஆட்சியை வீழ்த்திய மம்தா 3ஆவது முறையாக இன்று வரை ஆட்சியில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு கடன் கொடுத்து வசூலிக்கும் வட்டி விகிதம்தான் ரெப்போ விகிதமாகும். இந்த விகிதத்தை அடிப்படையாக கொண்டுதான் வணிக வங்கிகள் வாடிக்கையாளருக்கு கடன் வழங்குகின்றன. <<13804160>>ரெப்போ<<>> விகிதத்தில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அது வீட்டுக்கடன், தனிநபர் கடன் வாங்கியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விகிதம் அதிகரித்தால் தவணைத் தொகை அதிகரிக்கும், விகிதம் குறைந்தால் தவணைத் தொகையும் குறையும்.
வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி இருக்கலாம் என அவரது மாமனார் ராஜ்பால் ரதி சந்தேகம் எழுப்பியுள்ளார். தனது 100 சதவீத உழைப்பையும் வினேஷ் போகத் கொடுத்ததாகக் கூறிய அவர், இதில் மறைந்திருக்கும் உண்மைகளை கண்டறிய, ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு பிரதமர் அழுத்தம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளிப் பதக்கம் பெறுவது வினேஷின் உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. தரவரிசை பட்டியலுடன் மாணவர்களின் செல்போன் எண்களை சில விஷமிகள் சுயநலத்துக்காக வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறு வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. அத்துடன், அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நியூசிலாந்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, பாரம்பரியபடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய குடியரசுத் தலைவர் நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நியூசி பிரதமரைச் சந்தித்து, இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நியூசிலாந்தில் 8,000 இந்திய மாணவர்கள் படிக்கும் நிலையில், அங்கு கல்வி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
Sorry, no posts matched your criteria.