news

News August 8, 2024

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலர்ட்

image

ஜப்பானின் தெற்கு தீவில் உள்ள கியூஷூ பகுதியில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், பின்னர் 7.1 என்ற ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 8, 2024

ராகுலுக்கு பாக்.,கில் இருந்து வந்த மாம்பழங்கள்: பாஜக

image

பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து ராகுல் உள்ளிட்ட 7 எம்பிக்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இதயம் இருக்கும் இடத்தில் இருந்து ராகுல், மாம்பழங்களை பெறுகிறார் என பாஜக தலைவர்கள் அவரை விமர்சித்துள்ளனர். உ.பி மாம்பழங்கள் அவருக்கு பிடிக்காது என்றும் கிண்டல் செய்துள்ள பாஜகவினர், 7 பேருக்கு மட்டும் பழம் அனுப்ப வேண்டிய நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

News August 8, 2024

ALERT: இங்கெல்லாம் கனமழை அடித்து வெளுக்கும்.

image

தமிழகத்தில் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வரும் 11ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

News August 8, 2024

150 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் இந்திய நிறுவனங்கள்

image

1736ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாடியா குழுமம், தற்போது விமான போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ராம்தத் கோயன்கா 1820ல் தொடங்கிய RPG குழுமம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி உற்பத்தி துறைகளில் தற்போது செயல்பட்டு வருகிறது. 1857ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதித்யா பிர்லா குழுமம் நிதி, சிமெண்ட், மினரல் துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

News August 8, 2024

ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்போம்: சேகர்பாபு

image

ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக் கொள்வோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் பழனியில் நடைபெறும் அனைத்துலக முருகன் மாநாடு தொடர்பாக பேசிய அவர், இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது என்று கூறினார். மேலும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு எப்போதும் தலையிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News August 8, 2024

PHOTO: நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம்

image

நடிகர் நாகார்ஜுனா தனது மகன் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் <<13803599>>நிச்சயதார்த்தம்<<>> நடந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இன்று காலை 9.42 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்ததாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சோபிதாவை தங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகக் கூறிய அவர், இருவரும் மகிழ்ச்சியாக வாழ ஆசிர்வதித்துள்ளார்.

News August 8, 2024

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்

image

மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். வக்ஃபு வாரிய சொத்துகளை மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்யும் வகையில் இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதா அரசியல் அமைப்பின் அடிப்படை மீதே தாக்குதல் நடத்துவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

News August 8, 2024

வங்கதேசம் இந்தியாவுக்கான எச்சரிக்கை: கிருஷ்ணசாமி

image

வங்கதேச ஆட்சி கவிழ்ப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். வங்கதேசம் ஒரு அடிப்படை இஸ்லாமிய நாடாக இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை கொண்டவர்களால் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாக சாடிய அவர், நமது ஆட்சியாளர்கள் கூடுதல் கவனத்துடன் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தியுள்ளார்.

News August 8, 2024

கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

image

சுதந்திர தினமான ஆக.15இல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கான உத்தரவில், 100 நாள் வேலை திட்டம், ஜல்ஜீவன் திட்டம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

News August 8, 2024

விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்

image

புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்-08 செயற்கைக் கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. எஸ்.எஸ்.எல்.வி. டி-3, ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆக. 15ஆம் தேதி காலை 9:17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் அதற்கு முந்தைய நாள் தொடங்கும் எனத் தெரிகிறது. இது பூமியில் இருந்து 475 கி.மீ தூரத்தில் புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

error: Content is protected !!