India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பணவீக்கம் ஜூன் மாதம் 5.1%ஆக அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பணவீக்கம் 4.8% என்ற நிலையில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.2%ஆக இருக்குமெனவும், 2025-26ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.2% ஆக தொடருமென்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
RJ பாலாஜி நடித்த ‘ரன் பேபி ரன்’ படத்தை இயக்கியவர் ஜியன் கிருஷ்ணகுமார். இவர் அடுத்ததாக ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்று, படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க நிகிலா விமல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் தமிழ், மலையாளத்தில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மாயமாகியுள்ள 30 பேரை, டிஎன்ஏ மாதிரிகளைக் கொண்டு தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 31ஆம் தேதி அம்மாநிலத்தின் 3 மாவட்டங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு, அதி தீவிர கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. ராணுவம் உட்பட 650 மீட்பு படையினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்பி- ஆல்பர்ட் ஜான், சென்னை துணை ஆணையர்- சுஜித் குமார், நீலகிரி எஸ்.பி- நிஷா, பெரம்பலூர் எஸ்.பி- ஆதர்ஷ் பச்சேரா, சேலம் எஸ்.பி- கவுதம் கோயல், திருப்பத்தூர் எஸ்.பி- ஸ்ரேயா குப்தா, நாகை எஸ்.பி- அருண் கபிலன், கரூர் எஸ்.பி- பெரோஸ் கான் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாதியை பார்த்த கமல்ஹாசனுக்கு, படம் ரொம்பவே பிடித்துவிட்டதாம். டிசம்பர் 20ஆம் தேதியே ரிலீஸ் செய்யவும், ‘இந்தியன் 2’ ரிலீஸாக தாமதமானதால் ஏற்பட்ட பிரச்னைகளை விளக்கி, விரைந்து தணிக்கைக்கு அனுப்புமாறும் இயக்குநர் மணிரத்னத்திடம் அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. செர்பியா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் எல்லையில் பாதுகாப்பு பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஜம்மு & காஷ்மீரில் பாக்., உடனான மறைமுக போர், சீனாவுடன் எல்லை பிரச்னை நீடிக்கும் நிலையில், அண்டை நாடான வங்கதேசத்தில் நிலையற்ற சூழல் நிலவுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியா போன்ற பெரிய நாட்டில் பாதுகாப்பு குறைபாடு இருக்கும் போது, ஆயுத இறக்குமதியை மட்டும் நம்பி இருக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
ஆக.11இல் நடைபெறவுள்ள NEET -PG தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது. போதிய கால அவகாசமின்றி தேர்வு நடத்தப்படுவதாகவும், 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில் 185 தேர்வு மையங்களே அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
G pay, Phone Pay உள்ளிட்ட யுபிஐ மூலம் வரிச் செலுத்தும் தொகையை ரூ.5 லட்சமாக அதிகரிக்க RBI முடிவு செய்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ், யுபிஐ மூலம் வரிச் செலுத்தும் தொகை தற்போது ரூ.1 லட்சமாக உள்ளதென்றும், இதை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை பரிசீலித்து, மூலதன சந்தைகள், காப்பீடு, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நவீனுக்கும் (27), லித்திகாவுக்கும் (19) நேற்று காலை திருமணம் நடந்தது. மாலையில் நவீனின் மாமா வீட்டில் உள்ள அறையில் பேசிக் கொண்டிருந்த மணமக்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதில், கத்தியை எடுத்து சரமாரி குத்திக் கொண்டனர். இதில் லித்திகா உயிரிழந்தார். நவீன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுப்பெற்று இதய நோய்கள் வரும் சாத்திய கூறுகள் வெகுவாக குறைவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நெல்லிக்காயும், தேனும் ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்கள் என்பதால், உடலுக்கு கெடுதல் தரும் ஃப்ரீ ரேடிக்கல் அபாயத்தை தடுக்கின்றன. ரத்தத்தை தூய்மையாக்கவும், சரும பளபளப்பிற்கும் பயன்படுகிறது.
Sorry, no posts matched your criteria.