India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிளாமராக நடிக்க நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், அதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார். பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள், தற்போது அதிகம் வருவதாகவும் அதுபோன்ற படங்களில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தாயாக தனது குழந்தைகளை கவனித்து வந்ததால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்ற அவர், இனி மீண்டும் திரையில் பார்க்கலாம் என்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் க்யூட் ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜிம்னாஸ்டிக் போட்டியில் இத்தாலி வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற நிலையில், சோ யாக் வெள்ளி பதக்கம் வென்றார். அப்போது இத்தாலி வீராங்கனைகள் பதக்கங்களை கடிப்பது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அதனைப் பார்த்த சீன வீராங்கனையும் அதேபோல் செய்ய முயன்றது சுவாரசியமாக இருந்தது.
16 லட்சம் பேரின் பெயரில் 1.92 கோடி மொபைல் எண்கள் இணைப்பில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் மூலமே மொபைல் இணைப்பு வழங்கப்படுகிறது. இதையும் மீறி சிலர் போலி ஆவணம் கொடுத்து இணைப்பைப் பெற்றுள்ளனர். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர், போலி இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க செல் நிறுவனங்களை கேட்டிருப்பதாக தெரிவித்தார்.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்பி. கே.சி வேணுகோபால், வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை உறுப்பினர் ஆக்குவது மக்களின் மத உரிமை மீதான தாக்குதல் என விமர்சித்தார். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர்,
இடம்பெற முடியும் என்று யாராவது சிந்திக்க முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அதன் வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்த நிலையில், 2ஆவது சீரிஸ் கடந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில், 3ஆவது சீசன் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை திருப்பத்தூர், தி.மலை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், சேலம், மதுரை, கோவை, நீலகிரி, திருச்சி, ஈரோடு, நாகை, தஞ்சை, நாமக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், அல்பேனிய வீரர் அபாகரவை 12-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். இன்றிரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் இகுச்சியுடன் அவர் மோதவுள்ளார். அமன் ஷெராவத் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போலி ஆவணம் கொடுத்து வாங்கப்பட்ட 73 லட்சம் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய தொலைத் தொடர்பு இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் கூறியுள்ளார். மக்களவையில் இதுதொடர்பாக அவர் பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், மறுசரிபார்ப்பின்போது 81 லட்சம் இணைப்புகள் போலி ஆவணம் மூலம் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதில் 73 லட்சம் துண்டிக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள்தான் உண்மை விடுதலை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வெள்ளையர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டாலும் மது அரக்கனிடமிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை என்று விமர்சித்துள்ள அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
8ஆம் தேதி பிறந்தவர்களின் குணாதிசயம் குறித்து நியூமராலஜியில் கணிக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ளலாம். *தெய்வ நம்பிக்கை உடையவர்கள் *பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவார்கள் *கற்பனை வளம் கொண்டவர்கள் *நல்ல சிந்தனையாளர்கள் *அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள் *கடுமையான உழைப்பாளிகள் *பெரும் சாதனை புரிவார்கள்* தனித்துச் செயல்புரியும் திறன் கொண்டவர்கள்.
Sorry, no posts matched your criteria.