news

News August 8, 2024

நடிகர்களுக்கும் கஷ்டம் இருக்கும்: பிரியா பவானி சங்கர்

image

‘இந்தியன் 2’ தோல்விக்கு பிறகு, பிரியா பவானி சங்கரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இது குறித்த நேர்காணலில், தான் பல ஹிட் படங்களில் நடித்திருப்பதாகவும், அப்போதெல்லாம் தன்னால் படம் ஹிட்டானதாக கூறவில்லை என்றும், ஆனால், தற்போது தன்னை குற்றம்சாட்டுவது கஷ்டமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்களுக்கும் கஷ்டம் இருக்கும் என்றார்.

News August 8, 2024

வருத்தம் தெரிவித்த ஜெயக்குமார்: ரத்தானது வழக்கு

image

சென்னை மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் கைதான ஜெயக்குமார், திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். அவ்வாறு அவர் வரும் போது, அவரது ஆதரவாளர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷமிடுவதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இதற்கு ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

News August 8, 2024

நாதக இன்னொரு கட்சியின் தலைமையை ஏற்காது

image

திமுக, அதிமுக தங்களோடு கூட்டணி வைக்க விரும்பினாலும், அவர்களோடு ஒருபோதும் கூட்டணியில்லை என நாதக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அல்லது தவெக உடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நாம் தமிழர் கட்சி இன்னொரு கட்சியின் தலைமையை ஏற்க வாய்ப்பில்லை என்றார்.

News August 8, 2024

Olympics: ஆண்டிம் பங்கல் 3 ஆண்டுகள் விளையாட தடை

image

ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட, இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் 3 ஆண்டுகள் விளையாட தடை விதித்து இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. ஆண்டிம் பங்கல் தனது அடையாள அட்டையை, சகோதரியிடம் கொடுத்து அவரை ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுப்பியதால் ஒலிம்பிக் தொடரில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். 53 கிலோ எடைப் பிரிவில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2024

பிரான்ஸ் சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

image

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒலிம்பிக்ஸ் போட்டிகளை காண பிரான்ஸ் சென்றிருக்கிறார். மேலும், அவர் அங்கு தமிழக வீரர், வீராங்கனைகளை சந்தித்து ஊக்கப்படுத்தவுள்ளார். அவர் அரசுமுறை பயணமாக சென்றிருக்கிறாரா? அல்லது தனிப்பட்ட முறையில் சென்றிருக்கிறாரா என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. 3 நாட்கள் பயணம் முடிந்து திங்கட்கிழமை அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

News August 8, 2024

‘மனம் நொறுங்கி விட்டது’ ஷேக் ஹசீனா மகள் சைமா வசேத்

image

தனது அம்மாவை பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாமல் மனம் நொறுங்கிவிட்டதாக ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வசேத் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளால் மனம் வேதனை அடைந்துள்ளதுள்ளதாக தெரிவித்த அவர், இந்த இக்கட்டான நேரத்தில் அம்மாவுடன் (ஷேக் ஹசீனா) இல்லாதது கடும் மன அழுத்தத்தை தருவதாகவும் கூறியுள்ளார். சைமா வசேத் லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2024

தோழிக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த சிறுவன் கைது

image

டெல்லியின் நஜாப்கர் பகுதியில், 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது பெண் தோழியின் பிறந்தநாளில் அவருக்கு ஐஃபோன் பரிசளிக்க தனது தாயின் நகைகளை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விசாரணையில் தாயின் நகைகளை அருகில் உள்ள 2 வெவ்வேறு கடைகளில் விற்று, அந்த பணத்தில் பெண் தோழிக்கு ஐஃபோன் வாங்கிக் கொடுத்தது அம்பலமானது. தொடர்ந்து, நகைகளை மீட்ட போலீசார், திருட்டு நகை வாங்கிய கடைக்காரர்களை கைது செய்தனர்.

News August 8, 2024

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவிற்கு, முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மாநிலத்திற்கும், தேசத்திற்கும் அவரது உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் சேவை என்றென்றும் நினைவுகூரப்படும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

News August 8, 2024

நான் குற்றவாளி அல்ல : செந்தில் பாலாஜி

image

தவறு என்று தெரிந்தே பலரிடம் லஞ்சம் பெற்றுள்ளீர்கள், இதனை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு, நான் குற்றவாளி அல்ல, நான் நிரபராதி. எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என அவர் விளக்கமளித்தார். மேலும், அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்கள் என்னுடையது அல்ல, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

News August 8, 2024

கூட்டுக் குழுவுக்கு சென்ற வக்ஃபு வாரிய மசோதா

image

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா யாருடைய மத சுதந்திரத்திலும் தலையிடவில்லை என கூறிய அவர், எதிர்க்கட்சிகள் இதை உணர வேண்டும் என்றார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!