news

News August 8, 2024

52.81 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்

image

ஜூலை 19, 2024 வரை மொத்தம் 52.81 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்தக் கணக்குகளில் மட்டும் மக்கள் ₹2,30,792 கோடியை டெபாசிட் செய்து வைத்திருக்கின்றனர். இதில், 29.37 கோடி கணக்குகள் பெண்களுடையது என்றும் 35.15 கோடி கணக்குகள் ஊரகப் பகுதிகளை சேர்ந்த மக்களுடையது என்றும், புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News August 8, 2024

மனித இனத்திற்கே எதிரானது: கனிமொழி

image

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் மட்டுமல்லாது மனித இனத்திற்கே எதிரானது என திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் ஏன் தலையிட வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், இதனால் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

Olympics: வினேஷ் போகத் புகழ்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்

image

வினேஷ் போகத் அற்புதமான வீரர் என அமெரிக்க மல்யுத்த வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் தெரிவித்துள்ளார். அவருக்கு நடந்ததை நினைத்து வருந்துவதாக கூறிய அவர், வினேஷின் ஒலிம்பிக் பயணம் இப்படி முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என ஆதங்கம் தெரிவித்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் இறுதிப் போட்டியில், சாரா ஹில்டெப்ரண்ட்டுடன் விளையாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2024

பாமாயிலை அதிக வெப்பத்தில் பயன்படுத்தாதீர்!

image

பாமாயில் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பாமாயில் பெரிதாக கொலஸ்ட்ராலை அதிகரிப்பதில்லை என மருத்துவ கூட்டமைப்புகள் கூறுகின்றன. அதேநேரம், அதிகமான வெப்பநிலையில் இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறப்படுகிறது. அதாவது, வதக்குதல் போன்ற குறைந்த வெப்ப சமையல் முறைக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

News August 8, 2024

பட்ஜெட்டில் மாற்றங்கள் ஏன்? அமைச்சர் பதில்

image

கடந்த மாதம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதன்பின் பல மாற்றங்களை செய்திருக்கிறார். இதுகுறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மக்களின் கோரிக்கைகளுக்கு தான் செவி சாய்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டு, அதனை மாற்றும் தைரியம் எங்களுக்கு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

News August 8, 2024

அதிசயம்: அம்மன் கண்களில் வீசிய ஒளி

image

நெல்லை மாவட்டம் திசையன்விளை அற்புத விநாயகர் கோயிலில், அன்னை மூகாம்பிகைக்கு தனி ஆலயம் உள்ளது. நேற்று மாலை பூசாரி ஒருவர் அம்மனுக்கு பூஜைகள் செய்தபோது கண்களில் இருந்து ஒளி வீசுவதை கண்டார். இதனை அங்கிருந்த பக்தர்களும் கண்டு வியந்தனர். பின்னர், போலீசாரின் உத்தரவின் பேரில் இரவு 10.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. காலையில் கோயிலை திறந்து பார்த்தபோது அம்மன் கண்கள் இயல்பாக இருந்தது.

News August 8, 2024

கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்ற உத்தவ் தாக்கரே

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்தார். மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா அகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக இந்த சந்திப்பின்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருப்பதால் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகங்களை சுனிதா பார்த்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2024

வைரல்: “விசாரணை” பட பாணியில் விசாரணை

image

சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், விசாரணை என்ற பெயரில் இளைஞர்களை போலீஸ் அதிகாரி அடிக்கும் <>வீடியோ<<>> சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 2 இளைஞர்களை, பெரிய கட்டையால் போலீஸ் அதிகாரி கண்மூடித்தனமாக அடிக்கிறார். ஆபாச வார்த்தைகளாலும் திட்டுகிறார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 8, 2024

GOAT இசை வெளியீட்டு விழா நடைபெறாது?

image

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகிவரும், GOAT படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வழக்கமாக, தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது விஜய்யின் வழக்கம். ஆனால், தவெக மாநாடு இன்னும் சில தினங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், GOAT இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

News August 8, 2024

BREAKING: 32 தமிழக மீனவர்கள் கைது

image

தமிழக மீனவர்களை கைது செய்து, இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. கச்சத்தீவு – நெடுந்தீவுக்கு இடையே 32 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து, அழைத்து சென்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் மீனவர்கள் பிரச்னை குறித்து, தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

error: Content is protected !!