India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடிக்கு உழவு மேற்கொள்ள மானியம் வழங்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. ஹெக்டேர் ஒன்றிற்கு அதிகபட்சமாக ₹5,400 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இதற்கு, ஆதார், வங்கி புத்தகம், நிலச் சான்றிதழ் சிட்டா, பட்டா, நிலவரைபடம் ஆகிய ஆதாரங்கள் வழங்க வேண்டும். தி.மலை, சேலம், விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு, வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 2ஆவது முறையாக இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய ஹாக்கி வீரர்களின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி மற்றும் குழு ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என பாராட்டியுள்ளார். மேலும், துணிச்சலோடு விளையாடிய வீரர்களை வாழ்த்தியுள்ளார்.
ஜூலை 2016இல் வெளியிடப்பட்ட தங்கப்பத்திரங்கள் தற்போது முதிர்ச்சி அடைந்திருக்கின்றன. அதில் கிடைத்த தொகையை வைத்து கணக்கிட்டதில், வாங்கியோருக்கு ஆண்டுக்கு 11.96% லாபம் கிடைத்திருக்கிறது. இதே தங்கத்தை 24 கேரட் சொக்கத் தங்கமாக வாங்கியிருந்தால், இந்த 8 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10.1% லாபம் கிடைத்திருக்கும். அதையே, 22 கேரட் நகையாக வாங்கியிருந்தால், 8.8% லாபம் மட்டுமே கிடைத்திருக்கும்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகுவதாக அறிவித்துள்ளதால், அடுத்த தொகுப்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்பு கமல் பிசியாக இருந்தபோது, ஓடிடி சீசனை சிம்பு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர். தற்போது விஜய்சேதுபதி, சரத்குமார், பார்த்திபன் ஆகியோரின் பெயர்கள் அடிபடும் நிலையில், சிவகார்த்திகேயனின் பெயரை கமல் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வக்ஃபு வாரிய செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதே இந்த மசோதாவின் நோக்கம் என்றும், மசூதிகளை நடத்துவதில் மத்திய அரசு தலையிடாது எனவும் இருகட்சி தலைவர்களும் தெரிவித்துள்ளார்கள். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த ஹாக்கி கோல் கீப்பர்களில் ஒருவராக அறியப்படும் ஸ்ரீஜேஷ், வெண்கலப்பதக்கத்துடன் ஓய்வு பெற்றார். கேரளாவைச் சேர்ந்த அவர், இதுவரை இந்திய அணிக்காக 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 சாம்பியன்ஸ் கோப்பை, 2018 சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை வென்ற அவர், தற்போது இந்திய இளையோர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. அரையிறுதியில் ஜெர்மனியுடன் தோல்வியை தழுவி இந்திய அணி, வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, வெண்கலப்பதக்கத்தை தட்டித்தூக்கியது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘டாக்ஸிக்’ என பெயரிடப்பட்ட தனது 19ஆவது படத்தில் யாஷ் நடிக்கவுள்ளார். கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் 2025 ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் இப்படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Sorry, no posts matched your criteria.