India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார இறுதி நாள்களை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஆக.9,10,11 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும், மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், தி.மலை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்யவும்.
புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 3.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதில், 2.8 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு இம்மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என அவர் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க, மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான இடம் இருப்பதால் விரிவாக்க பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், குஜராத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல் பிற மாநிலங்களையும் மத்திய அரசு கவனிக்க வேண்டும் என்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம், இந்திய ஹாக்கி அணி தனது 13ஆவது ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 1928, 1932, 1936, 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து தங்கம் வென்ற இந்திய அணி 1964,1980 என மொத்தம் 8 தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 1960 ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும், 1968, 1972, 2020, 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெண்கலப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளை பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. நாளை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி 4 வெண்கலப்பதக்கம் வென்று, பதக்கப்பட்டியலில் 69ஆவது இடத்தை பிடித்துள்ளது. 27 தங்கம், 35 வெள்ளி, 33 வெண்கலப்பதக்கத்துடன் அமெரிக்கா முதலிடத்தையும், 27 தங்கம், 25 வெள்ளி, 17 வெண்கலப்பதக்கத்துடன் சீனா 2ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. மேலும், 18 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலப்பதக்கத்துடன் ஆஸ்திரேலியா 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை தமிழக மீனவ பிரதிநிதிகள் உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். நாடாளுமன்றத்திற்குள் செல்ல மீனவ பிரதிநிதிகளுக்கு பாஸ் வழங்கப்படாததால், அவர்களை வரவேற்பரையில் ராகுல் காந்தி சந்தித்தார். இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து அவரிடம் தமிழக மீனவர்கள் முறையிட்டனர்.
நடிகர் விஜய் சேதுபதி விவகாரத்தில் அர்ஜூன் சம்பத்துக்கு ₹4,000 அபராதம் விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேவர் குறித்து விஜய் சேதுபதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை தாக்கினால், ரொக்கப்பரிசு ₹1,001 வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் அறிவித்தார். இதுதொடர்பாக 2021இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ₹4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சட்டத்திருத்தத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வங்கதேச கலவரம் போல இந்தியாவிலும் நடக்க வாய்ப்புள்ளது, என காங்கிரஸின் சல்மான் குர்ஷித் கூறியுள்ளதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “வங்கதேசத்தில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினரை தாக்குகின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ள சகிப்புத்தன்மை மிக்க பெரும்பான்மையினர் ஒருபோதும் இப்படி செய்ய மாட்டார்கள். அதை பாஜக அரசும் அனுமதிக்காது” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.