India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணிப்பூரின் இம்பாலில் நேற்று மாலை டிரோன் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டதில் இளம்பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது கடந்த 2ஆவது நாளில் 2ஆவது சம்பவமாகும். கடந்த ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 3கி.மீ தூரத்தில், 2 வெடிகுண்டுகள் வீசி அடுத்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும், செஜம் சிராங் என்ற கிராமத்தில் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது.
தங்கலான் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் தான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். இப்படியொரு சிறப்பான கதாபாத்திரம் கொடுத்ததற்கு பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்த அவர், இது போல மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம் இனி வாழ்க்கையில் அமையுமா என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார். வருகிற செப்.6ஆம் தேதி இந்தி மொழியில் இப்படம் வெளியாக உள்ளது.
குறள் பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: இல்வாழ்க்கை
குறள் எண்: 42
குறள்: துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
பொருள்: பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவா அல்லது எதிரான நிலைப்பாட்டில் உள்ளதா என RSS தெளிவுபடுத்த வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மனுஸ்மிருதிக்கு ஆதரவாக செயல்படும் RSS, SC, ST, OBC மக்களின் நிலையை பற்றி உண்மையிலேயே கவலைப்படுகிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, பொதுநல திட்டங்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என RSS தலைவர் மோகன் பகவத் பேசியிருந்தார்.
‘தி கோட்’ படத்தின் கதை முதலில் ரஜினிக்காக எழுதப்பட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அதில் தந்தையாக ரஜினியையும், அவருக்கு மகனாக தனுஷையும் நடிக்க வைக்க ஆசைப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த படத்திற்கு ‘காந்தி’ என முதலில் பெயரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், விஜய்க்காக கதை மாற்றப்பட்டதாகவும், இது ‘மங்காத்தா’ பாணியிலான கதையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
*1759 – இலங்கை டச்சு அரசு, கிறிஸ்தவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது. *1958 – தமிழ் மொழி சிறப்பு அமலாக்க சட்டம் இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. *1981 – பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, ஐநாவில் கொண்டு வரப்பட்டது. *1992 – MGR-ஐ வைத்து 17 படங்களை இயக்கிய இயக்குனர் ப. நீலகண்டன் பிறந்த தினம் இன்று.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் (வெள்ளி), மனிஷா ராமதாஸ் ஆகியோர் பதக்கம் வென்றதை நேரில் கண்டு மகிழ்ந்ததாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தனது மகிழ்ச்சியை பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேவேந்திராவுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், வெற்றி பெற்ற இரண்டு வீராங்கனைகளுக்கும் வ்வ்வ்வ்வ்வ்
Flipkart Big Billion Days 2024 விற்பனை, பிளஸ் உறுப்பினர்களுக்காக வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற வாடிக்கையாளருக்கு வரும் 30ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தள்ளுபடி விவரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
செப்டம்பர்-3 (ஆவணி 18)
செவ்வாய்
நல்ல நேரம்: 07:45-08:45 AM & 04:45-05:45 PM
கெளரி நேரம்: 01:45-02:45 AM & 07:30-08:30 PM
இராகு காலம்: 03:00-04:30 AM
எமகண்டம்: 09:00-10:30 PM
குளிகை: 02:30-01:30 PM
திதி: பிரதமை
நட்சத்திரம்: மகம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
யோகம்: சித்த, அமிர்த யோகம்
சந்திராஷ்டமம்: திருவோணம்.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பேட்மிண்டனில் வெள்ளி வென்ற சுகாஸ் யத்திராஜ், வில்வித்தை குழு போட்டியில் வெண்கலம் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார், வில்வித்தையில் தங்கம் வென்ற சுமித் ஆகியோரை பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். இவர்களின் வெற்றியை கண்டு நாடு பெருமை கொள்வதாக அவர் வாழ்த்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.