India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை விமர்சித்து பேட்மிண்டன் வீராங்கனையும் பாஜக பிரமுகருமான சாய்னா நேவால் பேசியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தகுதி நீக்கம் செய்யப்பட விவகாரத்தில் மற்றவர் மீது பழி சுமத்துவதை விட, வினேஷும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இப்படி ஒரு பெரிய போட்டிக்கு முன்பு, அவர் தனது எடையை அதிகரிக்க செய்திருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவின் மூலமாக மதத்தால் மக்களை பிரிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக என்று AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவையில் பேசிய அவர், “இந்த மசோதா அரசியலமைப்பின் பிரிவு 14, 15 & 25இன் கொள்கைகளை மீறுகிறது. இந்த மசோதா பாரபட்சமானது, தன்னிச்சையானது. பாஜக அரசு முஸ்லீம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதா ஒரு சான்று” என சாடியுள்ளார்
கோலார் தங்கவயலில் பல ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் சுரங்கப் பகுதியில் பயங்கர சப்தத்துடன், ‘ஏர் பிளாஸ்ட்’ ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகள் குலுங்கியுள்ளன. நில அதிர்வை ஏற்படுத்திய ஏர் பிளாஸ்ட் குறித்து கண்டறிய உதவும், ‘சீஸ்மோ’ தொழில்நுட்ப கருவி தங்கவயலில் இருந்து வேறிடத்துக்கு எடுத்து சென்றதால், பிளாஸ்ட் ஏற்பட்ட சுரங்க இடத்தையும், அதிர்வு அளவையும் அறிய வாய்ப்பின்றிப் போனது.
➤1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டட பணிகள் தொடங்கப்பட்டன. ➤1655 – இங்கிலாந்தை ஒலிவர் குரொம்வெல் பிரபு 9 மாகாணங்களாகப் பிரித்தார். ➤1892 – இருவழி தந்திக்கான காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்றார். ➤1941 – எழுத்தாளர் க.ப.அறவாணன் பிறந்த நாள். ➤1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தனி நாடாக்கப்பட்டது. ➤2016 – கவிஞர் பஞ்சு அருணாசலம் மறைந்த நாள்.
SL-க்கு எதிரான ODI தொடரில் ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்காததே IND அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி விமர்சித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், “சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயரைவிட அனைத்து வகையிலும் ஜெய்ஸ்வால் சிறந்த வீரர். ஸ்பின்னர்களை நன்றாக அடிக்கக் கூடிய அவர் அணியில் இருந்திருந்தால், இத்தொடரை இந்தியா எளிதாக வென்று இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகவுள்ள ‘புறநானூறு’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியை வைத்து ‘கூலி’ படத்தை இயக்கிவரும் லோகேஷ், அது முடிந்ததும் புறநானூறு படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
உலகளவில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை & பொருளாதார மாற்றங்களால் மந்தநிலைக்கு ஆளான ஐ.டி., நிறுவனங்கள் தற்போது மீளத் தொடங்கியுள்ளன. இண்டீட் தளத்தின் தரவுகளின்படி, பல்வேறு நிறுவனங்களில் மென்பொருள் உருவாக்குநர் உள்ளிட்ட பணிகளுக்கான தேவையும் அதிகரித்து வருவதாக அறியமுடிகிறது. அத்துடன், 2025ஆம் ஆண்டுக்குள் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்புகள் 8.5% அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 17 ▶குறள்: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். ▶பொருள்: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான விசாரணை இன்று (ஆக.9) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் ஆக.11ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வின் வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக டெலிகிராமில் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.