India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
✍ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை; அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம். ✍எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்க மாட்டான். ✍ஆடுகளைத் தான் கோவில்களின் முன் வெட்டுகிறார்கள்; சிங்கங்களை அல்ல. ✍மதம் என்ற சொல்லை அழிக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை. ✍சாதித் திமிரும், அதன் கோரப்பிடியும் அழிந்தால் தான் அரசியல் சீர்திருத்தம் ஏற்படும்.
மாநில பட்ஜெட்டுகள் குறித்தும் மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று IMF இந்தியாவின் செயல் இயக்குநர் சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த சிஐஐ கருத்தரங்கில் பேசிய அவர், மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, மாநில பட்ஜெட்டிற்கும் மக்கள் தர வேண்டும். நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக கேள்விகள் கேட்டால்தான், மாநில அரசுகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அரிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, ஒலிம்பிக்ஸில் யாரும் இதுவரை தொடாத 92.97 மீ. எறிந்து சாதனை படைத்தார். இதுவரை ஈட்டி எறிதலில் அதிகபட்ச தூரம் 90.57 மீட்டர் ஆகும். அதனை தற்போது நதீம் முறியடித்துள்ளார். முதல் முயற்சியின்போது, எல்லைக் கோட்டை தாண்டியதாக அவருக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ODI போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில், டாப்-5இல் 3 இடங்களை இந்திய வீரர்கள் பிடித்துள்ளனர். அதாவது, சுப்மன் கில், ரோஹித் ஷர்மா & விராட் கோலி முறையே 2, 3 & 4 ஆவது இடங்களில் உள்ளனர். முதலிடத்தில் (PAK) பாபர் அசாம் தொடருகிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் குல்தீப் யாதவ், முகமது சிராஜுடன் 4ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
▶ஆகஸ்ட் – 9 ▶ஆடி – 24 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 4:45 PM – 5:45 PM
▶கெளரி நேரம்: 1:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பஞ்சமி ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶முகூர்த்தம்: இல்லை ▶யோகம்: அமிர்த-சித்த யோகம் ▶பிறை: வளர்பிறை ▶நட்சத்திரம்: அஸ்தம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
வணிக வரி துறையின் புதிய பிரிவான வரி ஆய்வு குழு எடுத்த நடவடிக்கையால், கடந்த 5 மாதங்களில், ₹2,000 கோடிக்கு அதிகமான கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. Tax Research Unit என்ற இந்த வரி ஆய்வு குழுவானது, வருவாய் வளர்ச்சி நிலை & ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், IGST வரி பிரிவில் இடம்பெறும் வணிகர்கள் மீது தனி கவனம் செலுத்துகிறது. இதன் காரணமாக கூடுதல் வரி வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் ஃபகத் ஃபாசிலின் சிறப்பு போஸ்டர் ஒன்றை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. இணையத்தில் வைரலாகியுள்ள அந்த போஸ்டரில் லுங்கி அணிந்துக் கொண்டு ஒரு கையில் கோடாரியும், மற்றொரு கையில் துப்பாக்கியும் ஏந்தியபடி மாஸான லுக்கில் காணப்படுகிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என மீண்டும் படக்குழு அறிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 15ஆவது நாளின் இறுதியில் பதக்கப்பட்டியலில் இந்தியா 64ஆவது இடத்தில் உள்ளது. ஒரு வெள்ளிப் பதக்கம், 4 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ள நிலையில், அமெரிக்கா (30), சீனா (29), ஆஸ்திரேலிய (18), பிரான்ஸ் (14), ஜெர்மனி (13) தங்கப் பதக்கங்களுடன் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு தங்கப்பதக்கத்தோடு 53ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை சீரமைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சமூக விரோதிகளால் மிரட்டப்படுவதால், தொழிலை வேறு மாநிலத்திற்கு மாற்றலாமா என்ற எண்ணம் தொழிலதிபர்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் கூறியுள்ளார். தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலங்களில் சென்றால், தமிழகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
பருவமழைக் காலத்தில் குளிர் காரணமாக ஏற்படும் நுரையீரல் தொற்று & கோழையை சரிசெய்யும் ஆற்றல் கற்பூர வள்ளிக்கு இருப்பதாக அகத்தியரின் பாடல் கூறுகிறது. பி-சைமீன், தைமால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள கற்பூர வள்ளி இலைகளை, ஏலம், கிராம்பு ஆகியவற்றுடன் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்துப் பருகினால் மாந்தம், இருமல், சளி, மலச் சிக்கல், தொண்டை கபம் போன்ற பிரச்னைகள் நீங்குமாம்.
Sorry, no posts matched your criteria.