India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு கிலோ ₹29க்கு பாரத் அரிசியை அறிமுகப்படுத்தியது. இந்த அரிசி 5 கிலோ, 10 கிலோ பைகளில் கிடைக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பாரத் அரிசி தமிழகத்தில் எங்கு கிடைக்கும் என்பது மக்களுக்கு தெரியவில்லை. இதனால் அதை எங்கு வாங்குவது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் பாரத் அரிசி கிடைக்கும் இடம் குறித்த அறிவிப்பை வெளியிட அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆக.,9ஆம் தேதி சர்வதேச பழங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது. வளங்களுக்காக காடு, மலைகளில் வாழ்ந்து வருகின்ற அம்மக்கள் அங்கிருந்து விரட்டப்படுவது பல நாடுகளில் இன்றும் தொடர்கிறது. பூமியின் தொல்குடிகளின் நிலம், மொழி உரிமைகளை உறுதி செய்யவும், கல்வி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசுகள் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.
இந்தியாவில் பல லட்சம் ஆன்ட்ராய்டு போன்கள் ஹேக்கிங் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. குவால்கம், மீடியாடெக் புராசஸரில் செயல்படும் ஆன்ட்ராய்டு 12, 12L, 13, 14 போன்களில் பல குறைகள் இருப்பதாகவும், இவை ஹேக்கிங் செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளது. எனவே, உடனடியாக செட்டிங்ஸ் சென்று சாப்ட்வேரை அப்டேட் செய்யும்படியும் சைபர் ஏஜென்சி கேட்டுக் கொண்டுள்ளது.
*முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளது – இபிஎஸ் *இந்துக்களின் உயிர் & உடைமைகளை பாதுகாக்கும் பொறுப்பு வங்கதேச அரசுக்கு உண்டு – ஓவைசி *அமெரிக்க ஆதரவின்றி ஹமாஸ் தலைவர் ஹனியே படுகொலை நடந்திருக்க சாத்தியமில்லை – ஈரான்
*டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹83.96ஆக முடிவு *பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பற்களில் சிலருக்கு மஞ்சள் கறை இருக்கும். இதை எளிய வழியில் சரி செய்ய முடியும் என பல் மருத்துவர்கள் கூறுகின்றனர். பல் துலக்கும்போது, எலுமிச்சைச் சாற்றோடு, சிறிது உப்பு சேர்த்து கறைபட்ட இடத்தில் தேய்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும் என்றும், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினாலும் கறை நீங்கும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இணைய வழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி அளிக்கப்படுகிறது. B.Sc Nursing, GNM, M.Sc Nursing, Post Basic B.Sc 2024இல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2021, 22, 23இல் தேர்ச்சி பெற்ற வேலையில்லாத நர்சிங் பட்டதாரிகளும் தகுதியானவர்கள். வயது வரம்பு: 20 -28 வயது வரை. மேலும், விவரங்களுக்கு <
தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, மும்பையைச் சேர்ந்தவர். முதலில் தெலுங்கு படத்தில் நடித்த அவர், தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து மான் கராத்தே, அரண்மனை, புலி, ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட பல படங்களிலும், ஓடிடி தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஹன்சிகா நடித்துள்ளார். இன்று அவரின் 33ஆவது பிறந்தநாள் ஆகும். அவருக்கு வாழ்த்துக்கள்.
சசிகலா சுற்றுபயணம் மேற்கொள்வதை அமமுக பொதுச் செயலாளரும், அவரின் உறவினருமான டிடிவி தினகரன் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஒற்றுமையை ஏற்படுத்த தென்காசியில் சுற்றுபயணத்தை தொடங்கி சசிகலா நடத்தி வருகிறார். இந்த சுற்றுபயணத்தில் டிடிவி கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை எனவும், அதில் பங்கேற்கக் கூடாதென டிடிவி தினகரன் கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 11.15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள் வங்கி கணக்கில் உடனடியாக ₹1,000 செலுத்தப்படும். இதன் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்துக்கு தமிழக அரசு ₹360 கோடி ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் காலை 7 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், தி.மலை, ராணிப்பேட்டை, காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.