India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வினேஷ் போகத் வழக்கில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதி நீக்கத்தை எதிர்த்து, வினேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், வழக்கறிஞர்களை நியமிக்கும்படியும் கேட்டுக்கொண்டது. வக்கீல்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இந்த மனு மீது இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா புலியைப் போல் போராடியதாக, இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவர் அடில்லே சுமரிவல்லா பாராட்டியுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த நீரஜ், டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் போது வீசிய தூரத்தை விட தற்போது 2 மீட்டர் அதிகமாக வீசியதாக அவர் புகழ்ந்துள்ளார். மேலும், அவர் ஒரு புலி எனவும் கூறியுள்ளார்.
தங்களுடைய எதிரிகளுக்கு ஆதரவளித்தால் இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்படும் என வங்கதேச தேசியவாத கட்சி தலைவர் கயேஷ்வர் ராய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் பரம எதிரி கட்சியாகும். இரு நாட்டு மக்களிடையேயும் எந்த பிரச்னைகளும் இல்லை, ஆனால் இந்தியா தொடர்ந்து அவாமி லீக் கட்சிக்கு மட்டும் ஆதரவளித்தால் அதனுடனான உறவை நீடிப்பது கடினம் என்று கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் நாக பஞ்சமி நாளாகும். அதன்படி, இன்று நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இன்று அம்மன் கோயிலுக்கு சென்று அங்குள்ள புற்றை வழிபட்டால் நாக தோஷம் விலகும் என்று ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்ல முடியாதோர், வீட்டில் நாகப்பாம்பு படம் வைத்து கற்பூரம் ஏற்றி மனமுருகி வழிபட்டால் நாக தோஷம் விலகும் என்று கூறப்படுகிறது.
வினேஷ் போகத் நீங்கள் தனியாக இல்லை, எது வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் நிற்கிறோம் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இதயங்களை வினேஷ் வென்றுள்ளதாகவும், கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வினேஷ் ஓய்வை அறிவித்த நிலையில், அவர் உறுதியாக இருக்குமாறும் யுவன் அறிவுறுத்தியுள்ளார்.
10ம் வகுப்பு படித்தோருக்கு ரயில்வேயின் (மத்திய மேற்கு ரயில்வே) அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 3,317 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இதற்கு விருப்பமுள்ளவர்கள் மத்திய மேற்கு ரயில்வே இணையதளமான wcr.indianrailways.gov.in. என்பதில் செப். 4 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோருக்கு வயது வரம்பாக 15 முதல் 24 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்நிலையில், சிறப்பாக விளையாடிய ஹாக்கி வீரர்களுக்கு இந்திய ஹாக்கி சம்மேளனம் வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வீரர்களுக்கும் தலா ₹15 லட்சமும், உதவியாளர்களுக்கு தலா ₹7.5 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
சவுக்கு சங்கர் தாய் கமலா மனு மீது ஐகோர்ட் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக அரசுக்கு எதிராக பேசியதாக, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவரது தாய் கமலா, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
இந்தியா, இலங்கை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதன்பிறகு, இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாடவுள்ளது. வங்கதேச
அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 T20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் செப். 19- 23ஆம் தேதி வரையிலும், 2ஆவது டெஸ்ட் கான்பூரில் செப். 27- அக்.1 வரையிலும் நடைபெறவுள்ளது. T20 தொடர் அக். 6இல் தொடங்குகிறது.
1945இல் 2ஆம் உலகப் போரில் ஜப்பானை பணிய வைக்க ஹிரோஷிமா மீது அமெரிக்கா ஆகஸ்ட் 6இல் “LITTLE BOY” அணுகுண்டை வீசியது. எனினும், ஜப்பான் சரணடையாததால், 3 நாள்கள் கழித்து நாகசாகி மீது “FATMAN” என்ற 2வது அணுகுண்டை வீசியது. இந்த 2 தாக்குதல்களிலும் 8 சதுர மைல்கள் பரப்பளவு பகுதிகள் நாசமாகின. சுமார் 1.40 லட்சம் பேர் பலியாகினர். இந்த கொடூர தாக்குதல் நடைபெற்ற நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.