India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சவுக்கு சங்கரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கும் வகையில் சவுக்கு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து தாய் கமலா தொடர்ந்த வழக்கில், சவுக்கு சங்கர் கருத்தால் பொது அமைதிக்கு குந்தகம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறி, வேறு வழக்குகளில் ஜாமின் பெற தேவையில்லையென்றால், அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க, ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுவது இந்திய பங்குச்சந்தைகளிலும் இன்று எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,098 புள்ளிகள் உயர்ந்து 79,984 புள்ளிகளாக அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 270 புள்ளிகள் அதிகரித்து, 24,387ஆக உயர்ந்தது. சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
கமல் நடித்த ‘இந்தியன் 2’ திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படம் இந்தியாவில் சர்ச்சையான நிலையில், வெளிநாடுகளில் மட்டும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் இன்று Stream ஆகியுள்ளது. சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த ஹாரர் படமான ‘7ஜி’, ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும், சில மாற்று மொழி படங்களும் வெளியாகியுள்ளன.
போதையில்லா தமிழ்நாடு உருவாகும் வகையில் ஆக.12ஆம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி ஏற்க அரசு உத்தரவிட்டுள்ளது. போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன், எனது உறவினர்கள், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் என மாணவர்கள் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டிவ்யா, வினேஷ் போகத் குறித்து பேசியதை திரும்ப பெற வலியுறுத்தி மாணிக்கம் தாகூர் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். நாடாளுமன்றத்தில், வினேஷ் போகத்தின் பயிற்சி, செலவுகளுக்காக அரசு 70.45 லட்சம் செலவு செய்ததாக மத்திய அமைச்சர் பேசினார். இது ஒன்றும் பாஜகவின் பணம் கிடையாது எனவும், விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து அரசு செயல்பட அவர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
நாட்டிலேயே முதல்முறையாக ஒடிஷாவில் கண்பார்வையற்றோருக்கான சர்வதேச பல்கலை. அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் 50 லட்சம் பார்வையற்றோர் இருப்பதாகவும், அதில் 5.21 லட்சம் பேர் ஒடிஷா மாநிலத்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், ஒடிஷாவில் சர்வதேச பல்கலை. அமைத்து, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பார்வையற்ற கவிஞர் பீமா போய் பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை 2ஆவது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ₹51,400க்கும், கிராமுக்கு ₹75 அதிகரித்து ₹6,425க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1.50 உயர்ந்து ₹88க்கும், கிலோவிற்கு ₹1,500 உயர்ந்து ₹88,000க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக விலை குறைந்த நிலையில், மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
எக்ஸ் பக்கத்தில் தனது படத்திற்குப் பதிலாக பிரதமர் மோடி தேசியக் கொடியை வைத்துள்ளார். அதில் அவர், சுதந்திர தினம் நெருங்கும் நிலையில் தேசிய கொடியை பெரிய இயக்கமாக மீண்டும் மாற்ற வேண்டியிருப்பதாகக் கூறியுள்ளார். தாம் தேசியக் கொடி மாற்றியிருப்பது போல நாட்டு மக்களும் மாற்றி வைக்க வலியுறுத்தியுள்ள அவர், கொடியுடன் செல்பி எடுத்து, <
வக்ஃபு சொத்துகளை அபகரித்து பறிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இதில், 40 திருத்தங்களைச் செய்து இஸ்லாமிய, சிறுபான்மை மக்களுக்கான மத உரிமைகளை பாஜக ஒழித்துக் கட்டியுள்ளது. வக்ஃபு சொத்துகளை இஸ்லாமியர்களிடம் இருந்து பறிக்கும் சட்டப்பூர்வ வேலையை பாஜக தொடங்கியிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
காசோலைக்கு சில மணி நேரத்தில் பணம் அளிக்கும் தொடர் CTS முறைக்கு RBI ஒப்புதல் அளித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தற்போது காசோலையை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து பணம் வழங்க 2 நாள் வரை ஆகிறது. இதற்குப் பதிலாக தொடர் CTS முறையின்கீழ், காசோலை பிரதி, MICR விவரம் ஆன்லைனில் பதிவேற்றப்படும். இதனால் காசோலைக்கு சில மணி நேரத்தில் பணம் கிடைக்கும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.